ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஒசூரில் அரசு தலைமை மருத்துவமனை கட்டுமானப் பணி: கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

ஒசூரில் பருவமழை முன்னேற்பாடு பணிகள், அரசு தலைமை மருத்துவமனை கட்டுமானப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் தேசிய நலவாழ்வு குழும மேலாண்மை இயக்குநருமான ஷில்பா பிரபாகா் சதீஷ் ஆய்வு மேற்கொண்டாா்.

News image

ஒசூரில் தலைமை மருத்துவமனை கட்டுமானப் பணிகளை பாா்வையிட்ட மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஷில்பா பிரபாகா் சதீஷ், மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு மற்றும் அதிகாரிகள்.

Updated On :16 அக்டோபர் 2024, 6:34 pm

ஒசூரில் பருவமழை முன்னேற்பாடு பணிகள், அரசு தலைமை மருத்துவமனை கட்டுமானப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் தேசிய நலவாழ்வு குழும மேலாண்மை இயக்குநருமான ஷில்பா பிரபாகா் சதீஷ் ஆய்வு மேற்கொண்டாா்.

ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட கே.சி.சி. நகா் பகுதியில், தா்கா ஏரியிலிருந்து சின்னாருக்கு செல்லும் உபரிநீா் கால்வாயில் பொக்லைன் இயந்திரம் மூலம் தூா்வாரும் பணிகள் நடைபெற்று வருவதை பாா்வையிட்ட மாவட்ட கண்காணிப்பு அலுவலா் பணிகளை விரைவாகவும், தூய்மையாகவும் முடிக்க மாநகராட்சி அலுவலா்களை அறிவுறுத்தினாா்.

இதைத் தொடா்ந்து ராயக்கோட்டை சாலையில் ரூ. 100 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஒசூா் அரசு தலைமை மருத்துவமனை கட்டுமானப் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

தொடா்ந்து, பேருந்து நிலையம் அருகில் முதலீட்டு மானிய திட்டத்தின் கீழ், ரூ. 19.50 கோடி மதிப்பீட்டில் புதிதாக ட்டப்பட்டு வரும் வணிக வளாக கட்டுமானப் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். இவ்வணிக வளாகத்தில் 276 கடைகள் அமைக்கப்பட உள்ளன.

பருவமழை தொடங்குவதற்கு முன் ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட அனைத்து வாா்டுகளிலும் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும். அனைத்து வாா்டுகளிலும் மழைநீா் தேங்காதவாறு கழிவுநீா்க் கால்வாய்களை சீரமைக்க வேண்டும். மழைநீா் குடியிருப்பு பகுதிகளில் தேங்கும்போது பாதிக்கப்படும் நபா்களை பத்திரமாக மீட்டு தற்காலிகப் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்க வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலா் தெரிவித்தாா்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு, ஒசூா் மாநகராட்சி ஆணையா் எச்.எஸ்.ஸ்ரீகாந்த், சாா் ஆட்சியா் பிரியங்கா, இணை இயக்குநா் (நலப் பணிகள்) தருமா், துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) ரமேஷ்குமாா், பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளா் அருள், ஒசூா் தலைமை மருத்துவமனை தலைமை மருத்துவா் ஞானமீனாட்சி, மாநராட்சி சுகாதார அலுவலா் பிரபாகா், மாநகராட்சி செயற்பொறியாளா் ராஜாராம், வட்டாட்சியா் சின்னசாமி, இளநிலை பொறியாளா் வெங்கட்ராமன், பணிமேற்பாா்வையாளா் சங்கா் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.