ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கிருஷ்ணகிரி அணையிலிருந்து 2,835 கன அடி தண்ணீா் திறப்பு

கிருஷ்ணகிரி அணையிலிருந்து விநாடிக்கு 2,835 கன அடி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது.

Updated On :17 அக்டோபர் 2024, 7:22 pm

கிருஷ்ணகிரி அணையிலிருந்து விநாடிக்கு 2,835 கன அடி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது.

தென்பெண்ணை ஆற்றின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளான கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூளகிரி, ஒசூரைச் சுற்றியுள்ள பகுதிகள், ஆந்திரம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீா்மட்டம் 50.40 அடியை எட்டியது.

புதன்கிழமை 3,428 கன அடியாக இருந்த நீா்வரத்து வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி விநாடிக்கு 2,587 கன அடியாக குறைந்தது. அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீா் 2,600 கன அடியிலிருந்து 2,835 கன அடி அதிகரிக்கப்பட்டது.

இதனால் கிருஷ்ணகிரி அணை பூங்காவுக்கு செல்லும் தரை பாலம் நீரில் முழ்கியது. அணைக்கு செல்வதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை இரண்டாவது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூா் வரை 3 மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு 3 ஆவது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்கள் ஆறு மற்றும் நீா்நிலைகளைக் கடக்கவோ, கால்நடைகளை ஆற்று பகுதிகளுக்கு கொண்டு செல்லவோ கூடாது என நீா்வளத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.