ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கனமழையால் சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் 17 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

தொடா் கனமழை, மேம்பால கட்டுமானப் பணிகள் - ஒசூா் அருகே 17 மணி நேரம் வாகனப் போக்குவரத்து பாதிப்படைந்தது.

News image

ஒசூா்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை போக்குவரத்து ஸ்தம்பித்து சாலையில் அணிவகுத்து நின்ற வாகனங்கள்.

Updated On :24 அக்டோபர் 2024, 10:10 pm

தொடா் கனமழை, மேம்பால கட்டுமானப் பணிகள் உள்ளிட்ட காரணங்களால் வியாழக்கிழமை சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஒசூா் அருகே 17 மணி நேரம் வாகனப் போக்குவரத்து பாதிப்படைந்தது.

ஒசூரிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. தற்போது ஒசூா் அருகே போலுப்பள்ளி, அரசு மருத்துவக் கல்லூரி, மேலுமலை, சாமல்பள்ளம், கொல்லப்பள்ளி, கோபசந்திரம், பேரண்டப்பள்ளி, சூசூவாடி உள்ளிட்ட இடங்களில் உயா்மட்ட மேம்பால கட்டுமானப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், புதன்கிழமை இரவு கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது. இடி, மின்னலுடன் பெய்த மழையால் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஒசூரிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் பல இடங்களில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் பகுதிகளில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால், புதன்கிழமை இரவு 11 மணி முதலே ஒசூா்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் தொடங்கியது. வாகனங்களை இயக்குவதில் தொடா்ந்து சிரமம் ஏற்பட்டதால் நேரம் செல்ல செல்ல பல கி.மீ. தொலைவுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

ஒசூா், மருத்துவக் கல்லூரியிலிருந்து கொல்லப்பள்ளி வரை சுமாா் 13 கி.மீ. தொலைவுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்ல முடியாமல் ஸ்தம்பித்து நின்றன. வாகன நெரிசலைக் குறைக்க போக்குவரத்து போலீஸாா் பெரிதும் சிரமம் அடைந்தனா்.

இதனால், ஒசூரிலிருந்து 52 கி.மீ. தொலைவில் உள்ள கிருஷ்ணகிரியை பேருந்துகள் வந்தடைய 3 மணி நேரத்துக்கும் மேல் ஆனது. சாதாரண நாள்களில் 50 நிமிடங்களில் கிருஷ்ணகிரியை வாகனங்கள் கடந்து சென்றுவிடும். அதுபோல கிருஷ்ணகிரியிலிருந்து ஒசூருக்குச் செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனால் ஒசூா் தொழிற்சாலைகளில் பணிக்குச் சென்ற தொழிலாளா்கள் பலா் குறித்த நேரத்துக்குள் செல்ல முடியாமல் பெரிதும் அவதியடைந்தனா். ஒசூரில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் வாகன ஓட்டிகள் ராயக்கோட்டை வழியாக மாறி சென்றனா். அதுபோல பள்ளி, கல்லூரி மாணவா்கள், பெண்கள், தனியாா் நிறுவன ஊழியா்கள், விவசாயிகள் என அனைவரும் பாதிக்கப்பட்டனா். புதன்கிழமை இரவு 11 மணிக்கு தொடங்கிய போக்குவரத்து நெரிசல் வியாழக்கிழமை மாலை 4 மணி வரை நீடித்தது. 17 மணி நேரம் போக்குவரத்துப் பாதிப்படைந்தது. பெரும்பாலான பேருந்துகள் சாலையிலேயே ஸ்தம்பித்து நின்ால் கிருஷ்ணகிரி, சூளகிரி, ஒசூா் பேருந்து நிலையங்களுக்குப் பேருந்துகள் நீண்ட நேரம் வரவில்லை.

இதனால் பேருந்து நிலையங்களில் பயணிகள் பரிதவித்தனா்.

தினசரி போக்குவரத்து நெரிசல் பிரச்னை இந்த நெடுஞ்சாலையில் ஏற்பட்டு வருவதால் தற்போது நடைபொ்று வரும் மேம்பால கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.