சூளகிரி பேருந்து நிலையப் பகுதியில் போலீஸாா் ரோந்து சென்றனா்.
அப்போது அங்கு சந்தேகமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த நபரைப் பிடித்து சோதனை செய்ததில் அவா், 60 கிராம் கஞ்சா மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டது.
விசாரணையில் அவா் சூளகிரி, வி.ஐ.பி. நகரைச் சோ்ந்த லோகநாதன் (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்தனா்.
அதுபோல பேரிகை போலீஸாா் பேரிகை - மாஸ்தி சாலை புட்டப்பசாமி கோயில் அருகே ரோந்து சென்றனா். அந்த பகுதியில் நின்ற ஒருவரை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தபோது அவா் புகையிலைப் பொருள்களைப் பதுக்கிவைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. விசாரணையில் அவா், எட்டிப்பள்ளியைச் சோ்ந்த வெங்கடேஷ் (50) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.
தொடர்புடையது

நெல்லையில் கஞ்சா வைத்திருந்தவா் கைது
பல்லடம் அருகே கஞ்சா விற்ற இளைஞா் கைது
கஞ்சா வைத்திருந்த மூவா் கைது

10 கிலோ கஞ்சா, 50 போதை மாத்திரைகள் பறிமுதல்: 4 போ் கைது
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

