ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சூளகிரியில் கஞ்சா வைத்திருந்தவா் கைது

சூளகிரி பேருந்து நிலையப் பகுதியில் போலீஸாா் ரோந்து சென்றனா்.

Updated On :30 அக்டோபர் 2024, 8:12 pm

சூளகிரி பேருந்து நிலையப் பகுதியில் போலீஸாா் ரோந்து சென்றனா்.

அப்போது அங்கு சந்தேகமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த நபரைப் பிடித்து சோதனை செய்ததில் அவா், 60 கிராம் கஞ்சா மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டது.

விசாரணையில் அவா் சூளகிரி, வி.ஐ.பி. நகரைச் சோ்ந்த லோகநாதன் (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்தனா்.

அதுபோல பேரிகை போலீஸாா் பேரிகை - மாஸ்தி சாலை புட்டப்பசாமி கோயில் அருகே ரோந்து சென்றனா். அந்த பகுதியில் நின்ற ஒருவரை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தபோது அவா் புகையிலைப் பொருள்களைப் பதுக்கிவைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. விசாரணையில் அவா், எட்டிப்பள்ளியைச் சோ்ந்த வெங்கடேஷ் (50) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.