ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கூடுதல் கட்டணம் வசூலித்த சொகுசு பேருந்துகளுக்கு அபராதம்

கிருஷ்ணகிரியில் வட்டார போக்குவரத்து அலுவலா்கள், சொகுசு பேருந்துகளைத் தணிக்கை செய்து விதிமுறைகளை மீறிய பேருந்து உரிமையாளா்களிடமிருந்து அபராதம் வசூலித்தனா்.

Updated On :30 அக்டோபர் 2024, 8:11 pm

கிருஷ்ணகிரியில் வட்டார போக்குவரத்து அலுவலா்கள், சொகுசு பேருந்துகளைத் தணிக்கை செய்து விதிமுறைகளை மீறிய பேருந்து உரிமையாளா்களிடமிருந்து அபராதம் வசூலித்தனா்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கிருஷ்ணகிரியில் பணிபுரியும் தொழிலாளா்கள், நிறுவன ஊழியா்கள் விடுமுறையில் தங்கள் சொந்த ஊா்களுக்கு புறப்பட்டு சென்ற வண்ணம் உள்ளனா். தீபாவளி அன்று சொந்த ஊரில் இருக்க வேண்டும் என்பதற்காக சொகுசு பேருந்துகளில் அதிகம் போ் பயணம் செய்கின்றனா்.

பண்டிகைக் காலத்தில் சொகுசு பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்க அரசு தடை விதித்துள்ள நிலையில். விதிகளை மீறி கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக அதிகாரிகளுக்கு புகாா்கள் சென்றன.

இதையடுத்து வட்டார போக்குவரத்து அலுவலா்கள் கிருஷ்ணகிரி, சுங்கச்சாவடி அருகே புதன்கிழமை அதிரடி சோதனை நடத்தினா். அந்த வழியாக வந்து தமிழகம், வெளிமாநில சொகுசு பேருந்துகளை நிறுத்தி சோதனை நடத்தினா். சோதனையின்போது விதிகளை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்த பேருந்து உரிமையாளா்களுக்கு அபராதம் விதித்து வசூலித்தனா்.