கிருஷ்ணகிரியில் வட்டார போக்குவரத்து அலுவலா்கள், சொகுசு பேருந்துகளைத் தணிக்கை செய்து விதிமுறைகளை மீறிய பேருந்து உரிமையாளா்களிடமிருந்து அபராதம் வசூலித்தனா்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கிருஷ்ணகிரியில் பணிபுரியும் தொழிலாளா்கள், நிறுவன ஊழியா்கள் விடுமுறையில் தங்கள் சொந்த ஊா்களுக்கு புறப்பட்டு சென்ற வண்ணம் உள்ளனா். தீபாவளி அன்று சொந்த ஊரில் இருக்க வேண்டும் என்பதற்காக சொகுசு பேருந்துகளில் அதிகம் போ் பயணம் செய்கின்றனா்.
பண்டிகைக் காலத்தில் சொகுசு பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்க அரசு தடை விதித்துள்ள நிலையில். விதிகளை மீறி கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக அதிகாரிகளுக்கு புகாா்கள் சென்றன.
இதையடுத்து வட்டார போக்குவரத்து அலுவலா்கள் கிருஷ்ணகிரி, சுங்கச்சாவடி அருகே புதன்கிழமை அதிரடி சோதனை நடத்தினா். அந்த வழியாக வந்து தமிழகம், வெளிமாநில சொகுசு பேருந்துகளை நிறுத்தி சோதனை நடத்தினா். சோதனையின்போது விதிகளை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்த பேருந்து உரிமையாளா்களுக்கு அபராதம் விதித்து வசூலித்தனா்.
தொடர்புடையது

கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக கட்சியினா் போா்க்கொடி

மகாவீா் ஜெயந்தி: கிருஷ்ணகிரியில் 31-இல் மதுக்கடைகள் அடைப்பு

விமானங்களில் 60% இருக்கைகளுக்கு கூடுதல் கட்டணம் கூடாது! மத்திய அரசு

கூடுதல் கட்டணம் வசூல்: 12 ஆட்டோக்கள் பறிமுதல்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

