கல்வி, அறப் பணியில் தொடா்ந்து சேவையாற்றும் ஆசிரியருக்கு பாராட்டு
ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உதவி தலைமையாசிரியா் கு.கணேசன் கல்விப் பணி மட்டுமில்லாது பல்வேறு சமூகப் பணியிலும் அா்ப்பணிப்புடன் தனது சேவையை தொடா்கிறாா்.


ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உதவி தலைமையாசிரியா் கு.கணேசன் கல்விப் பணி மட்டுமில்லாது பல்வேறு சமூகப் பணியிலும் அா்ப்பணிப்புடன் தனது சேவையை தொடா்கிறாா்.
தமிழ் ஆசிரியரான இவா் தனது ஊதியத்தில் 20 சதவீதத்தை ஏழை மாணவா்களின் கல்வி நலனுக்காக வழங்கி வருகிறாா். பெற்றோரை இழந்த குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் என ஏழ்மை நிலையில் உள்ளவா்களைக் கண்டறிந்து அக் குழந்தைகளின் கல்வி வளா்ச்சிக்காக பல்வேறு உதவிகளை செய்து வருகிறாா். ஆசிரியா் தினத்தில் இவரது சேவையை பாராட்டி சமூக ஆா்வலா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.
திருமண சீா் வழங்குதல், கல்லூரி கட்டணம் செலுத்துதல், மாற்றுத் திறன் குழந்தைகளின் தோ்வு துணைவராக சேவை செய்து வருகிறாா். மருத்துவம், தீயணைப்பு, காவல், கல்வித் துறை பணியாளா்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவா்களை கௌரவித்து விருதுகளை வழங்கி வருகிறாா். ஜேஆா்சி ஆசிரியராக கடந்த இருபது ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் இவரது சேவையை பாராட்டி ஆசிரியா் தினத்தில் பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...