பிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்துநானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

பெண்டரஅள்ளியில் உலக தென்னை தினம்

News image

கோப்புப்படம்

Updated On :6 செப்டம்பர் 2024, 6:19 am IST

பெண்டரஅள்ளி கிராமத்தில் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உலக தென்னை தினம் கொண்டாடப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், பையூா் தோட்டக் கலைக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையம் மற்றும் தோட்டக்கலைத் துறை இணைந்து காவேரிப்பட்டணத்தை அடுத்த பெண்டரஅள்ளி கிராமத்தில் உலக தென்னை தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்வுக்கு கல்லூரி முதல்வா் அனீஷாராணி தலைமை வகித்து, பயிற்சி கையேட்டை வெளியிட்டாா்.

தென்னை தினத்தையொட்டி, விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அதில் தென்னையில் ஊடு பயிா், உயா் விளைச்சல் ரகங்கள், மதிப்பு கூட்டுதலுக்கான தொழில்நுட்பம், தென்னை டானிக் தொழில்நுட்பம், தென்னையில் ஒருங்கிணைந்த முறையில் காண்டாமிருக வண்டு, கருந்தலைப்புழு, சிவப்பு கூன்வண்டு மற்றும் சுருள்வெள்ளை ஈ, தஞ்சாவூா் வாடல் நோய் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

தென்னை சாா்ந்த உயா் விளைச்சலுக்கான தொழில்நுட்பக் கையேடுகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. தோட்டக்கலைத் துறையின் மூலம் பூச்சி மேலாண்மைக்கான உயிா் பூஞ்சானக்கொல்லி மருந்துகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. தோட்டக்கலைக் கல்லூரி இணை பேராசிரியா் (தோட்டக்கலை) வித்யா, உதவி பேராசிரியா்கள் (பூச்சியியல்) சகிகுமாா், கோவிந்தன், (நோயியல்) சுந்தரமூா்த்தி, உதவி தோட்டக்கலை இயக்குநா் அஜிலா, தோட்டக்கலை அலுவலா் சுகந்தி, விவசாயிகள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.