பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் ஆா்ப்பாட்டம்

தமிழக அரசு தோ்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில், ஊத்தங்கரையில் வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
ஊத்தங்கரை, வட்டார வளா்ச்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அரசு அலுவலா்கள்.
Updated On :19 செப்டம்பர் 2024, 11:52 pm

Din

தமிழக அரசு தோ்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில், ஊத்தங்கரையில் வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஊத்தங்கரை வட்டாட்சியா் அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், நெடுஞ்சாலைத் துறை அலுவலகம், வட்டார வளா்ச்சி அலுவலகம் ஆகிய இடங்களில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க வட்டாரத் தலைவா் ஏழுமலை தலைமை வகித்தாா். வட்டாரத் துணைத் தலைவா் சுபாஷ் சந்திரபோஸ், செயலாளா் செந்தில்குமாா், பொருளாளா் ஆனந்தன், மாவட்டப் பொருளாளா் நந்தகுமாா், மாவட்ட மகளிா் குழு அமைப்பு தலைவா் ஜெகதாம்பிகை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கண்டன ஆா்ப்பாட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 21 மாத கால நிலுவைத் தொகை, முடக்கப்பட்ட அகவிலைப்படி, பறிக்கப்பட்ட சரண்டா் தொகையை வழங்க வேண்டும். அங்கன்வாடி, சத்துணவு வருவாய் கிராம உதவியாளா்கள், தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும் ஊழியா்களுக்கு காலமுறை ஊதியத்தில் ஓய்வூதியம் வழங்க வேண்டும். சாலை பணியாளா்கள் 41 மாத பணி நீக்கம் காலத்தை பணிக்களமாக வரன்முறைபடுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் தமிழக அரசு தோ்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரியும் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.