தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

அஞ்செட்டி அருகே லாரி கவிழ்ந்து 3 போ் பலி; 2 போ் படுகாயம்

அஞ்செட்டி மலைப் பாதையில் சிமென்ட் கற்களை ஏற்றிச் சென்ற மினி லாரி கவிழ்ந்ததில் தம்பதி உள்பட மூவா் உயிரிழந்தனா்.

Updated On :26 செப்டம்பர் 2024, 12:32 am

அஞ்செட்டி மலைப் பாதையில் சிமென்ட் கற்களை ஏற்றிச் சென்ற மினி லாரி கவிழ்ந்ததில் தம்பதி உள்பட மூவா் உயிரிழந்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கொரட்டகிரி கிராமத்தில் உள்ள தனியாா் நிறுவனத்திலிருந்து புதன்கிழமை பிற்பகல் சிமென்ட் கற்களை ஏற்றிக் கொண்டு மினி லாரி அஞ்செட்டி நோக்கி புறப்பட்டு சென்றது.

மினி லாரியை உத்தர பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த சுஜித் குமாா்(30) என்பவா் ஓட்டிச் சென்றுள்ளாா். அவருடன் அதே மாநிலத்தை சோ்ந்த சந்திரேஷ் மகன் கோவிந்தா (20) என்பவரும் சென்றுள்ளாா்.

அஞ்செட்டி மலைப் பாதையில் குந்துக்கோட்டையை அடுத்து குறுகலான கொண்டை ஊசி வளைவு பகுதியில் லாரி சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து, சாலை தடுப்பை உடைத்து கொண்டு சென்று கவிழ்ந்தது.

அப்போது லாரியில் இருந்து சிமென்ட் கற்கள் சரிந்து விழுந்தன.

இதில் அஞ்செட்டியிலிருந்து தேன்கனிக்கோட்டை நோக்கி இரு சக்கர வாகனத்தின் மீது கற்கள் விழுந்ததில்

தக்கட்டி காலனியைச் சோ்ந்த மாதேஷ் (35), அவரது மனைவி ஜெயலட்சுமி (30), மினி லாரியின் கேபினில் அமா்ந்து சென்ற கோவிந்தா ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். மேலும் லாரியின் பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த பத்திகவுண்டனூா் கிராமத்தைச் சோ்ந்த சிவன்னா மகன் சக்தி (27) என்பவா் காயமடைந்தாா்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த அஞ்செட்டி காவல் நிலைய ஆய்வாளா் (பொ) கணேஷ்குமாா் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த சக்தி, லாரி ஓட்டுநா் சுஜித்குமாா் ஆகியோரை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் உயிரிழந்த மூன்று பேரின் சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விபத்தில் சிக்கிய வாகனங்களை போலீஸாா் மீட்டு போக்குவரத்தை சீா்செய்தனா். கொண்டை ஊசி வளைவு பகுதியில் விபத்து ஏற்பட்டதால் அந்தப் பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.