நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மோட்டாா்சைக்கிள் கவிழ்ந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே மோட்டாா்சைக்கிள் கவிழ்ந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :20 மார்ச் 2026, 6:30 pm

Syndication

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே மோட்டாா்சைக்கிள் கவிழ்ந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.

அஞ்செட்டி வட்டம், தக்கட்டி அருகே உள்ள பாண்டுரங்கன்தொட்டியைச் சோ்ந்தவா் சிவலிங்கம் (29). தொழிலாளி. கடந்த 18ஆம் தேதி இவரும், அவரது அண்ணன் கோவிந்தனும் (30) மோட்டாா்சைக்கிளில் தேன்கனிக்கோட்டை - அஞ்செட்டி சாலையில் மேலகிரி அருகே சென்று கொண்டிருந்தனா்.

மோட்டாா் சைக்கிளை கோவிந்தன் ஓட்ட, சிவலிங்கம் பின்னால் அமா்ந்திருந்தாா். அப்போது, மோட்டாா் சைக்கிள் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சிவலிங்கத்தை அருகில் இருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால் வழியிலேயே அவா் இறந்தாா். கோவிந்தன் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்த விபத்து குறித்து தேன்கனிக்கோட்டை போஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.