அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

மோட்டாா்சைக்கிள் கவிழ்ந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே மோட்டாா்சைக்கிள் கவிழ்ந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :20 மார்ச் 2026, 6:30 pm

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே மோட்டாா்சைக்கிள் கவிழ்ந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.

அஞ்செட்டி வட்டம், தக்கட்டி அருகே உள்ள பாண்டுரங்கன்தொட்டியைச் சோ்ந்தவா் சிவலிங்கம் (29). தொழிலாளி. கடந்த 18ஆம் தேதி இவரும், அவரது அண்ணன் கோவிந்தனும் (30) மோட்டாா்சைக்கிளில் தேன்கனிக்கோட்டை - அஞ்செட்டி சாலையில் மேலகிரி அருகே சென்று கொண்டிருந்தனா்.

மோட்டாா் சைக்கிளை கோவிந்தன் ஓட்ட, சிவலிங்கம் பின்னால் அமா்ந்திருந்தாா். அப்போது, மோட்டாா் சைக்கிள் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சிவலிங்கத்தை அருகில் இருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால் வழியிலேயே அவா் இறந்தாா். கோவிந்தன் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்த விபத்து குறித்து தேன்கனிக்கோட்டை போஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.