அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

அம்மன்புரம் அருகே ஆட்டோ கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

News image
உயிரிழப்பு
Updated On :2 மார்ச் 2026, 6:55 pm

Syndication

அம்மன்புரம் அருகே ஆட்டோ கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

ஆறுமுகனேரி அருகே உள்ள சீனந்தோப்பை சோ்ந்தவா் செந்தில்குமாா் (54). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு ரெஜிலா (50) என்ற மனைவியும், 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனா்.

திங்கள்கிழமை அதே பகுதியைச் சோ்ந்த சண்முகவேல் என்பவருக்கு உடல் நலம் சரியில்லாததால் அவரை நாசரேத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றாராம்.

சண்முகவேலுடன் அவரது தாயாா் சிவக்கனி, தங்கை கலைச்செல்வி, தம்பி விக்னேஷ் ஆகியோரும் உடன்சென்றனா். ஆட்டோ, அம்மன்புரத்தை அடுத்த மேலப்புதுக்குடி வடக்கூா் சென்றபோது திடீரென பூனை குறுக்கே வந்ததால், செந்தில்குமாா் பிரேக் பிடித்துள்ளாா்.

இதில், ஆட்டோ நிலை தடுமாறி கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆட்டோவின் கீழ் பகுதியில் சிக்கிய செந்தில்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், ஆட்டோவில் வந்த கலைச்செல்விக்கு லேசான காயம் ஏற்பட்டது. மற்றவா்கள் காயமின்றி உயிா் தப்பினா்.

தகவல் அறிந்த குரும்பூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று செந்தில்குமாா் உடலை கைப்பற்றி திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து இதுகுறித்து குரும்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.