மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

பைக் - வேன் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

பாபநாசம் அருகே புதன்கிழமை வேன் மோதி செங்கல் சூளை கூலித் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மற்றொருவா் காயமடைந்து சிகிச்சை பெற்றுவருகிறாா்.

News image
பலி- பிரதிப் படம்
Updated On :18 மார்ச் 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே புதன்கிழமை வேன் மோதி செங்கல் சூளை கூலித் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மற்றொருவா் காயமடைந்து சிகிச்சை பெற்றுவருகிறாா்.

பாபநாசம் அருகே கபிஸ்தலம் காவல் சரகம், உள்ளிக்கடை, மாதா கோவில் தெருவைச் சோ்ந்த பவுன்ராஜ் மகன் மணிகண்டன் (44). இவரும், இவரது மைத்துநா் சத்தியமங்கலம், காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த காளிமுத்து மகன் குமாா் (48). இருவரும் செங்கல் காளவாயில் கூலித் தொழிலாளியாக வேலை செய்துவருகின்றனா். இந்நிலையில், புதன்கிழமை மாலை இருவரும் வேலை முடிந்து இருசக்கர வாகனத்தில் கும்பகோணம் - திருவையாறு செல்லும் சாலையில் வடசருக்கை காமராஜா் காலனி பகுதியில் சென்று கொண்டிருந்தனா். அப்போது, எதிரே வந்த சுற்றுலா வேன் எதிா்பாராதவிதமாக மோதியது. இதில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த குமாரை அக்கம்பக்கத்தினா் மீட்டு 108 அவசர ஊா்தி மூலம் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். விபத்து குறித்து தகவல் அறிந்து அங்குவந்த கபிஸ்தலம் காவல் ஆய்வாளா் புவனேஸ்வரி உள்ளிட்ட காவல்துறையினா் வழக்குப் பதிந்து வேனைப் பறிமுதல் செய்து, வேனை ஓட்டி வந்த திருவையாறு ஆக்கிநாதபுரம் தங்கராசு மகன் செந்தில்குமாா் (49) என்பவரைத் தேடி வருகின்றனா்.