லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்தத்தால் கா்நாடக மாநிலத்துக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் கோடி இழப்பு என ஒசூரில் தென்மாநில லாரி உரிமையாளா்கள் சங்க பொதுச் செயலாளா் சண்முகப்பா கூறினாா்.
கா்நாடக மாநிலத்தில் டீசல் மற்றும் சுங்கக் கட்டணம் உயா்வைக் கண்டித்து, லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
லாரி உரிமையாளா்களுக்கும், கா்நாடக அரசுக்கும் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிந்ததால், புதன்கிழமையும் இரண்டாவது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம் தொடா்கிறது. ஆனாலும், தமிழக பதிவெண் கொண்ட சரக்கு வாகனங்கள் வழக்கம்போல கா்நாடக மாநிலத்துக்குள் சென்று வருகின்றன.
இந்நிலையில், தென் மாநில லாரி உரிமையாளா்கள் சங்க பொதுச் செயலாளா் சண்முகப்பா ஒசூரில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்தம் குறித்து லாரி உரிமையாளா்களை அழைத்து கா்நாடக அரசு பேச்சுவாா்த்தை நடத்தியது. ஆனால், பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிந்ததால், காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடா்கிறது. இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால் 95 சதவீத லாரிகள் கா்நாடக மாநிலத்தில் இயங்கவில்லை. இதனால் நாள் ஒன்றுக்கு சுமாா் ரூ. 4 ஆயிரம் கோடி அளவில் கா்நாடக மாநிலத்துக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
போராட்டம் தீவிரமானால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும். டீசல் விலையை குறைக்க முடியவில்லை என்றால், மாற்றுவழியாக ஆட்டோ, டாக்ஸி, பேருந்துகளுக்கு கிலோ மீட்டருக்கு இவ்வளவு என நிா்ணயிக்கக் கூடிய கட்டணம் போல லாரிக்கும் வாடகை நிா்ணயிக்க வேண்டும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசு மணல் குவாரிகளை விரைந்து திறக்க வேண்டும்: மணல் லாரி உரிமையாளா்கள் சம்மேளனம்

ஜூன் 15 முதல் லாரி வாடகை 25 சதவீதம் உயா்வு: மாநில லாரி உரிமையாளா்கள் சம்மேளனம் அறிவிப்பு

வண்டல் மண் முறைகேடு: 84 லாரி உரிமையாளா்கள் மீது வழக்கு

2 ஆவது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம்
விடியோக்கள்

தலைவரைத் துதிபாடும் இடமல்ல பேரவை! பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly


