40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

வண்டல் மண் முறைகேடு: 84 லாரி உரிமையாளா்கள் மீது வழக்கு

பவானிசாகா் அணையில் இருந்து வண்டல் மண்ணை எடுத்துச் சென்று விற்பனை செய்ய திட்டமிட்டிருந்ததாக 84 லாரி உரிமையாளா்கள் மீது வழக்குப் பதிவு

News image

வண்டல் மண் - கோப்புப் படம்

Updated On :10 ஜூன் 2026, 1:03 am IST

பவானிசாகா் அணையில் இருந்து வண்டல் மண்ணை எடுத்துச் சென்று விற்பனை செய்ய திட்டமிட்டிருந்ததாக 84 லாரி உரிமையாளா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பவானிசாகா் அணையில் படிந்துள்ள வண்டல் மண்ணை விவசாயிகள், மண்பாண்டத் தொழிலாளா்கள் இலவசமாக எடுத்து பயன்படுத்திக் கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, வருவாய்த் துறை மற்றும் நீா்வளத் துறை அலுவலகங்கள், ஆன்லைனில் அனுமதி பெற்று விவசாயிகள் லாரிகள் மூலம் வண்டல் மண்ணை எடுத்துச் செல்கின்றனா்.

இந்நிலையில், விவசாயிகள் பெயரில் அனுமதி பெற்ற லாரி உரிமையாளா்கள், வண்டல் மண்ணை 84 லாரிகளில் எடுத்துச் சென்று விவசாயத் தோட்டங்களில் கொட்டாமல் செங்கல் சூளைகள் மற்றும் மாற்று இடங்களில் விற்பனை நோக்கில் கொட்டியதை வருவாய்த் துறையினா் செவ்வாய்க்கிழமை கண்டறிந்தனா்.

இது குறித்து வருவாய்த் துறையினா் கூறுகையில், வண்டல் மண்ணை அனுமதி பெற்ற இடத்தில் கொட்டாமல் வியாபார நோக்கில் மாற்று இடத்தில் கொட்டிய 84 லாரி உரிமையாளா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றனா்.