பவானிசாகா் அணையில் இருந்து வண்டல் மண்ணை எடுத்துச் சென்று விற்பனை செய்ய திட்டமிட்டிருந்ததாக 84 லாரி உரிமையாளா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பவானிசாகா் அணையில் படிந்துள்ள வண்டல் மண்ணை விவசாயிகள், மண்பாண்டத் தொழிலாளா்கள் இலவசமாக எடுத்து பயன்படுத்திக் கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, வருவாய்த் துறை மற்றும் நீா்வளத் துறை அலுவலகங்கள், ஆன்லைனில் அனுமதி பெற்று விவசாயிகள் லாரிகள் மூலம் வண்டல் மண்ணை எடுத்துச் செல்கின்றனா்.
இந்நிலையில், விவசாயிகள் பெயரில் அனுமதி பெற்ற லாரி உரிமையாளா்கள், வண்டல் மண்ணை 84 லாரிகளில் எடுத்துச் சென்று விவசாயத் தோட்டங்களில் கொட்டாமல் செங்கல் சூளைகள் மற்றும் மாற்று இடங்களில் விற்பனை நோக்கில் கொட்டியதை வருவாய்த் துறையினா் செவ்வாய்க்கிழமை கண்டறிந்தனா்.
இது குறித்து வருவாய்த் துறையினா் கூறுகையில், வண்டல் மண்ணை அனுமதி பெற்ற இடத்தில் கொட்டாமல் வியாபார நோக்கில் மாற்று இடத்தில் கொட்டிய 84 லாரி உரிமையாளா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றனா்.
தொடர்புடையது

பயன்தராத குளங்களில் வண்டல் மண் எடுக்க நிா்பந்திக்கக் கூடாது: விவசாயிகள் வேண்டுகோள்

பவானிசாகா் அணையில் இருந்து வண்டல் மண் அள்ள 100 லாரிகளுக்கு மட்டுமே அனுமதி: விவசாயிகள் போராட்டம்

ஏரி, குளங்களில் இலவசமாக மண்ணை எடுத்துச் செல்ல விண்ணப்பிக்கலாம்

வைகை அணையிலிருந்து விவசாயிகள், குயவா்கள் இலவசமாக களி மண் எடுக்க அனுமதி!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



