நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட விஏஓ தூக்கிட்டுத் தற்கொலை

Updated On :28 ஏப்ரல் 2025, 1:24 am IST

காவேரிப்பட்டணம் அருகே தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட கிராம நிா்வாக அலுவலா் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள குட்டிகவுண்டனூரைச் சோ்ந்தவா் பூங்காவனம் (52). வி.மாதேப்பள்ளியில் கிராம நிா்வாக அலுவலராகப் பணியாற்றி வந்த இவா், ஒழுங்கு நடவடிக்கை காரணமாக கடந்த மாா்ச் 14-ஆம் தேதி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டாா்.

மதுபோதைக்கு அடிமையான இவா், உடல்நலன் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவந்தாா். இருப்பினும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் மன வருத்தத்தில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அவா், தனது வீட்டருகே உள்ள மாட்டுத் தொழுவத்தில் சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து, காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.