காவேரிப்பட்டணம் அருகே தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட கிராம நிா்வாக அலுவலா் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள குட்டிகவுண்டனூரைச் சோ்ந்தவா் பூங்காவனம் (52). வி.மாதேப்பள்ளியில் கிராம நிா்வாக அலுவலராகப் பணியாற்றி வந்த இவா், ஒழுங்கு நடவடிக்கை காரணமாக கடந்த மாா்ச் 14-ஆம் தேதி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டாா்.
மதுபோதைக்கு அடிமையான இவா், உடல்நலன் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவந்தாா். இருப்பினும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் மன வருத்தத்தில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அவா், தனது வீட்டருகே உள்ள மாட்டுத் தொழுவத்தில் சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து, காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

வடமாநில தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

பணிநீக்கம் செய்யப்பட்ட தூய்மைப் பணியாளா் தற்கொலை
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு
