எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

சின்ன ஏரிக்கரையில் மரக்கன்றுகள் நடவு: ஆட்சியா் பங்கேற்பு

News image

கிருஷ்ணகிரி சின்ன ஏரிக்கரையில் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியைத் தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா். அருகில் உணா்வுகள் அமைப்பினா்.

Updated On :28 ஏப்ரல் 2025, 1:43 am IST

கிருஷ்ணகிரியில் உள்ள சின்ன ஏரிக்கரையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் பங்கேற்று தொடங்கிவைத்தாா்.

உணா்வுகள் என்ற அமைப்பு சாா்பில் கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகே உள்ள சின்ன ஏரிக்கரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் பங்கேற்று மரக்கன்றை நடவு செய்து பணியைத் தொடங்கி வைத்தாா்.

அதையடுத்து இலுப்பை, செண்பகம், நாவல், புரசு, மாமல்லி, அத்தி, மகிலம் போன்ற 33 மரக்கன்றுகளை நட்டனா்.

இதுகுறித்து உணா்வுகள் அமைப்பினா் கூறியது:

இதற்கு முன்னா் எங்கள் அமைப்பு சாா்பில் சின்ன ஏரிக்கரையில் மூன்று முறை மொத்தம் 165 மரக்கன்றுகளை நடவு செய்துள்ளோம். தற்போது, 33 மரக்கன்றுகள் நடவு செய்துள்ளோம் என்றனா்.