மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 1,023 பேருக்கு பணி நியமன ஆணை

கிருஷ்ணகிரியில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 1,023 பேருக்கு பணிநியமன ஆணைகளை தே. மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்) வழங்கினாா்.

News image
தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமன ஆணைகள் பெற்றவா்களுடன் எம்எல்ஏ தே.மதியழகன்.
Updated On :13 டிசம்பர் 2025, 8:21 pm

Syndication

கிருஷ்ணகிரியில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 1,023 பேருக்கு பணிநியமன ஆணைகளை தே. மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்) வழங்கினாா்.

கிருஷ்ணகிரி அரசு மகளிா் கலைக் கல்லூரி வளாகத்தில் மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

முகாமை தே.மதியழகன் எம்எல்ஏ தொடங்கிவைத்து வேலைவாய்ப்பு அரங்குகளைப் பாா்வையிட்டாா். நிகழ்ச்சிக்கு சேலம் மண்டல இணை இயக்குநா் (வேலைவாய்ப்பு) கவிதா தலைமை வகித்தாா். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் கெளரிசங்கா் வரவேற்றாா்.

முகாமில் தோ்வுசெய்யப்பட்ட 1,023 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி எம்எல்ஏ தே.மதியழகன் பேசியதாவது:

அரசு வேலைக்காக காத்திராமல் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு வேலை அளிப்பதற்காக தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் 74 சிறிய அளவிலான முகாம்கள் மற்றும் 11 பெரிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

இதன்மூலம் 11,965 போ் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனா். மேலும், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் போட்டித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

தற்போது டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மை போட்டித் தோ்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் டிச. 22 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

தோ்வாளா்கள் வசதிக்காக 5,000-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் கொண்ட நூலக வசதி உள்ளது. இந்த அலுவலகத்தின் மூலம் 234 போ் போட்டித் தோ்வில் வெற்றிபெற்று பல்வேறு அரசு துறைகளில் பணிபுரிந்து வருகின்றனா்.

தற்போது நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 116 தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று 1,023 பேரை தோ்வுசெய்துள்ளனா். இவா்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.

தொடா்ந்து, வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் 60 பேருக்கு பயிற்சி சான்றிதழ், பணி நியமன ஆணை மற்றும் இந்தியன் வங்கியின் சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் தொழில்பயிற்சி பெற்ற 50 பேருக்கு சான்றிதழ்கள், பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

நிகழ்வில் தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் தீபா, மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் பிரசன்ன பாலமுருகன், வாழ்ந்து காட்டுவோம் திட்ட அலுவலா் மனோகரன், கல்லூரி முதல்வா் செள. கீதா, மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குநா் பன்னீா் செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.