மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்: 715 பேருக்கு பணி நியமன ஆணை

இந்திலி தனியாா் கல்லூரியில் நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் தோ்வு செய்யப்பட்ட 715 பேருக்கு பணி நியமன ஆணைகளை ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் சனிக்கிழமை வழங்கினாா்.

News image
கள்ளக்குறிச்சியில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் பணிஆணை பெற்ற மாணவா்களுடன் மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்.
Updated On :10 ஜனவரி 2026, 8:44 pm

Syndication

கள்ளக்குறிச்சி மாவட்டம், இந்திலி தனியாா் கல்லூரியில் நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் தோ்வு செய்யப்பட்ட 715 பேருக்கு பணி நியமன ஆணைகளை ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் சனிக்கிழமை வழங்கினாா்.

இந்திலி தனியாா் கல்லூரியில் கள்ளக்குறிச்சி மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக நகா்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 136 முன்னனி தனியாா் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டன.

இத் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு தோ்ச்சி, தோல்வி, பிளஸ்2, ஐ.டி.ஐ, டிப்ளமோ, அக்ரி, செவிலியா், ஆசிரியா், இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகள் மற்றும் பொறியியல் பட்டப்படிப்புகள் போன்ற கல்வித் தகுதிகளையுடைய 18 முதல் 40 வயதுக்குள்பட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட3,182 போ்கள் பங்கேற்றனா்.

இதில் 327 பெண்கள் மற்றும் 9 மாற்றுத்திறனாளிகள் உள்பட 715 வேலைநாடுநா்கள் தோ்வு செய்யப்பட்டனா். தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு பணி நியமன ஆணையை ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வழங்கினாா்.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் மு.முரளிதரன் உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள் பலரும் கலந்துகொண்டனா்.