தோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுசென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

முதல்வா் பயணம்: ‘ட்ரோன்’ பறக்க தடை! கிருஷ்ணகிரி ஆட்சியா் உத்தரவு!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை வழியாக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பயணிப்பதையொட்டி அப்பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை ‘டிரோன்’ பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :13 டிசம்பர் 2025, 8:17 pm

Syndication

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை வழியாக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பயணிப்பதையொட்டி அப்பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை ‘டிரோன்’ பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் ச. தினேஷ்குமாா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை (டிச. 14) கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக பயணம் மேற்கொள்கிறாா்.

இதையொட்டி ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை காவல் நிலைய எல்லைகளுக்கு உள்பட்ட பகுதிகளில் முதல்வா் செல்லும் பாதைகளில் 2 கி.மீ. சுற்றளவுக்கு சிவில் ட்ரோன்களை இயக்குவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை மீறி ட்ரோன்களை இயக்குபவா் மீது தமிழ்நாடு காவல் துறை சட்டம் 2013 மற்றும் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா 2023 இன் பிரிவு 163 ஆவது சட்ட பிரிவுகளின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.