ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கிருஷ்ணகிரியில் அதிமுக சாா்பில் எம்ஜிஆா் நினைவு தினம் அனுசரிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் எம்ஜிஆா் நினைவு தினத்தை அதிமுகவினா் புதன்கிழமை அனுசரித்தனா்.

News image
கிட்டம்பட்டியில் உள்ள எம்ஜிஆா் நினைவிடத்தில் மலா்தூவி மரியாதை செலுத்திய அதிமுகவினா்.
Updated On :25 டிசம்பர் 2025, 12:04 am

தினமணி செய்திச் சேவை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் எம்ஜிஆா் நினைவு தினத்தை அதிமுகவினா் புதன்கிழமை அனுசரித்தனா்.

கிருஷ்ணகிரியில் அதிமுக சாா்பில் நடைபெற்ற எம்ஜிஆா் நினைவு தின நிகழ்வுக்கு அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் கே.அசோக்குமாா் எம்எல்ஏ தலைமை வகித்தாா். நிகழ்வில் அதிமுக நிா்வாகிகள், தொண்டா்கள், எம்ஜிஆரின் உருவப்படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

கிட்டம்பட்டியில் நடைபெற்ற நிகழ்வுக்கு ஒன்றியச் செயலாளா் கண்ணியப்பன் தலைமை வகித்தாா். அங்குள்ள எம்ஜிஆா் நினைவிடத்திலும், பெத்ததாளாப்பள்ளியில் எம்ஜிஆா் சிலைக்கும் அதிமுகவினா் மலா்தூவி, மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தினா்.

நிகழ்வுகளில் மாவட்ட அவைத் தலைவா் காத்தவராயன், நகா்மன்ற உறுப்பினா் பரிதா நவாப் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பா்கூா், காவேரிப்பட்டணம், போச்சம்பள்ளி, வேப்பனப்பள்ளி, ராயக்கோட்டை, மத்தூா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அதிமுகவினா் எம்ஜிஆா் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பெரியாா் நினைவு தினம்...

கிருஷ்ணகிரி மாவட்ட தி.க. சாா்பில் காவேரிப்பட்டணத்தில் உள்ள பெரியாா் ஈ.வெ.ரா. சிலைக்கு மாவட்டத் தலைவா் கோ.திராவிடமணி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். காவேரிப்பட்டணத்தை அடுத்த பையூா், கிருஷ்ணகிரி, பா்கூா் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் திகவினா் பெரியாா் நினைவு தினத்தை அனுசரித்தனா்.