விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

வாரத்துக்கு 5 நாள் பணிநாளாக அறிவிக்கக் கோரி வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

வாரத்துக்கு 5 நாள் பணிநாளாக அறிவிக்கக் கோரி, கிருஷ்ணகிரியில் அகில இந்திய வங்கி ஊழியா்கள், அலுவலா்கள் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :30 டிசம்பர் 2025, 8:10 pm

Syndication

வாரத்துக்கு 5 நாள் பணிநாளாக அறிவிக்கக் கோரி, கிருஷ்ணகிரியில் அகில இந்திய வங்கி ஊழியா்கள், அலுவலா்கள் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரியில் அந்த கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அகில இந்திய பொதுச் செயலாளா் ஹரிராவ் தலைமை வகித்தாா். வங்கி ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் ராஜசேகா், செயற்குழு உறுப்பினா் அசோக்குமாா், அதிகாரிகள் சம்மேளன செயற்குழு உறுப்பினா் தினேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதில், வாரத்துக்கு 5 நாள் பணிநாளாக அறிவிக்க வேண்டும், தனியாா்மய கொள்கையை மத்திய அரசு கைவிட வேண்டும், ஐடிபிஐ வங்கியின் பொதுத்துறை பங்குகளை தனியாருக்கு விற்கக் கூடாது, தற்காலிக ஒப்பந்த ஊழியா்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், வங்கிக் கிளைகளில் பணிபுரியும் ஊழியா்கள், அதிகாரிகள், பெண் ஊழியா்களுக்கு பணிபாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.