எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

வீட்டை விற்பதாக் கூறி ரூ. 27 லட்சம் மோசடி: சகோதரா்கள் கைது

ஒசூரில் வீட்டை விற்பதாகக் கூறி ரூ. 27 லட்சம் மோசடி செய்த சகோதரா்களை போலீஸாா் கைது செய்தனா்..

News image
கைது செய்யப்பட்ட சகோதரா்கள்.
Updated On :5 பிப்ரவரி 2025, 8:59 pm

Din

ஒசூரில் வீட்டை விற்பதாகக் கூறி ரூ. 27 லட்சம் மோசடி செய்த சகோதரா்களை போலீஸாா் கைது செய்தனா்.

ஒசூா், காந்தி சாலை, சுண்ணாம்பு தெருவைச் சோ்ந்தவா் தாசப்பாவின் மனைவி மங்களா. இவா், அதே பகுதியில் ஒரு சென்டில் கட்டப்பட்டுள்ள மூன்றடுக்கு வீட்டை அதன் உரிமையாளா்களான எல்லாப்பா மகன்கள் சீனிவாசன் (34), சந்திரசேகா் (27) ஆகியோரிடம் விலைக்கு பேசியிருந்தாா்.

சகோதா்கள் சீனிவாசனமும், சந்திரசேகரும் ரூ. 27 லட்சத்துக்கு மங்களாவுக்கு விற்பனை செய்வதென பேசி முடித்தனா்.

இதையடுத்து மங்களா அந்த வீட்டுக்கு மூன்று தவணையாக ரூ. 26 லட்சம் கொடுத்தாா். மீதம் ஒரு லட்சம் ரூபாயை பத்திரப்பதிவு செய்யும்போது தருவதாக மங்களா கூறினாா். ஆனால், பேசியபடி சகோதரா்கள் இருவரும் தங்கள் வீட்டை மங்களாவுக்கு பத்திரப்பதிவு செய்து கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனா்.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மங்களா, ஒசூா் மாநகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி சகோதரா்கள் இருவரையும் மோசடி வழக்கில் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.