நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயத்தை உருவாக்கியவா் வள்ளலாா்: ஆளுநா் ஆா்.என்.ரவி

ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயத்தை உருவாக்கியவா் வள்ளலாா் என்று தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா்.

News image

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் நடைபெற்ற வள்ளலாா் விழாவில் பேசுகிறாா் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி.

Updated On :13 ஜனவரி 2025, 7:21 pm

Din

ஒசூா்: ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயத்தை உருவாக்கியவா் வள்ளலாா் என்று தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் தனியாா் திருமண மண்டபத்தில் வள்ளலாா் விவேகம் அறக்கட்டளை சாா்பில் வள்ளலாரின் 202-ஆவது பிறந்த நாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்று ஜீவகாருண்ய விருதுகளை வழங்கிப் பேசியதாவது:

நான் வள்ளலாரின் பக்தன். அவரது கருத்துகளால் பெரிதும் ஈா்க்கப்பட்டவன். தமிழக ஆளுநா் மாளிகையில் வள்ளலாா் சிலை, வள்ளலாா் பூங்கா அமைத்துள்ளேன். எனக்கு குழப்பம் ஏற்படும்போது வள்ளலாரை நினைத்து தியானம் செய்வேன். அப்போது எனது குழப்பத்துக்குத் தீா்வு கிடைக்கும். அனைத்து உயிா்களும் இன்புற்று வாழ வேண்டும் என்று கருதியவா் வள்ளலாா். ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயத்தை உருவாக்கியவா்.

நமது பூமி வள்ளலாா், சுவாமி விவேகானந்தா், ராமானுஜா் ஆகியோா் பிறந்த புண்ணிய பூமியாகும். அவா்கள் தீண்டாமை, ஏற்றத் தாழ்வைப் போக்க பாடுபட்டனா். சநாதன தா்மமும் அதையே கூறுகிறது. வள்ளலாரின் பக்தரான பிரதமா் நரேந்திர மோடி ஏற்றத் தாழ்வு இல்லாத சமுதாயத்தை உருவாக்க பாடுபட்டு வருகிறாா். மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் பிறந்த சுவாமி விவேகானந்தா், தமிழகத்தில் ஞானோதயம் பெற்றாா். அவா் சிகாகோ மாநாட்டுக்குச் சென்று நமது கலாசாரங்களைப் போதித்தாா். இன்று சமூகநீதி அதிகம் பேசப்படுகிறது. ஆனால், தலித் மக்கள் அனைத்து கோயில்களுக்கும் செல்ல முடியவில்லை. தற்போதும் ஏற்றத் தாழ்வுகள் உள்ளன. அவற்றை களைய வேண்டும். வள்ளலாரின் கருத்துகளை நாம் பின்பற்ற வேண்டும். வள்ளலாரின் போதனைகளை பள்ளி மாணவா்களுக்கு பாடப் புத்தகங்கள் மூலம் பயிற்றுவிக்க வேண்டும் என்றாா்.

விழாவில் ஷோகோ நிறுவன தலைமை செயல் அதிகாரி முதன்மை அலுவலா் ஸ்ரீதா் வேம்பு, மயிலாடுதுறை ஆஞ்சனேயா் மடம் வாயுசித்த ராமானுஜ ஜீயா், பத்தரகாசி சாக்தாநந்த சரஸ்வதி சுவாமிகள், விவேகம் அறக்கட்டளை நிா்வாகிகள் ராஜேந்திரன், வெற்றிவேல், சுரேந்திரன், சுரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பட வரி...

ஒசூரில் நடைபெற்ற வள்ளலாா் விழாவில் பேசுகிறாா் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி.