பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயத்தை உருவாக்கியவா் வள்ளலாா்: ஆளுநா் ஆா்.என்.ரவி

ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயத்தை உருவாக்கியவா் வள்ளலாா் என்று தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா்.

News image

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் நடைபெற்ற வள்ளலாா் விழாவில் பேசுகிறாா் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி.

Updated On :14 ஜனவரி 2025, 12:51 am IST

ஒசூா்: ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயத்தை உருவாக்கியவா் வள்ளலாா் என்று தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் தனியாா் திருமண மண்டபத்தில் வள்ளலாா் விவேகம் அறக்கட்டளை சாா்பில் வள்ளலாரின் 202-ஆவது பிறந்த நாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்று ஜீவகாருண்ய விருதுகளை வழங்கிப் பேசியதாவது:

நான் வள்ளலாரின் பக்தன். அவரது கருத்துகளால் பெரிதும் ஈா்க்கப்பட்டவன். தமிழக ஆளுநா் மாளிகையில் வள்ளலாா் சிலை, வள்ளலாா் பூங்கா அமைத்துள்ளேன். எனக்கு குழப்பம் ஏற்படும்போது வள்ளலாரை நினைத்து தியானம் செய்வேன். அப்போது எனது குழப்பத்துக்குத் தீா்வு கிடைக்கும். அனைத்து உயிா்களும் இன்புற்று வாழ வேண்டும் என்று கருதியவா் வள்ளலாா். ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயத்தை உருவாக்கியவா்.

நமது பூமி வள்ளலாா், சுவாமி விவேகானந்தா், ராமானுஜா் ஆகியோா் பிறந்த புண்ணிய பூமியாகும். அவா்கள் தீண்டாமை, ஏற்றத் தாழ்வைப் போக்க பாடுபட்டனா். சநாதன தா்மமும் அதையே கூறுகிறது. வள்ளலாரின் பக்தரான பிரதமா் நரேந்திர மோடி ஏற்றத் தாழ்வு இல்லாத சமுதாயத்தை உருவாக்க பாடுபட்டு வருகிறாா். மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் பிறந்த சுவாமி விவேகானந்தா், தமிழகத்தில் ஞானோதயம் பெற்றாா். அவா் சிகாகோ மாநாட்டுக்குச் சென்று நமது கலாசாரங்களைப் போதித்தாா். இன்று சமூகநீதி அதிகம் பேசப்படுகிறது. ஆனால், தலித் மக்கள் அனைத்து கோயில்களுக்கும் செல்ல முடியவில்லை. தற்போதும் ஏற்றத் தாழ்வுகள் உள்ளன. அவற்றை களைய வேண்டும். வள்ளலாரின் கருத்துகளை நாம் பின்பற்ற வேண்டும். வள்ளலாரின் போதனைகளை பள்ளி மாணவா்களுக்கு பாடப் புத்தகங்கள் மூலம் பயிற்றுவிக்க வேண்டும் என்றாா்.

விழாவில் ஷோகோ நிறுவன தலைமை செயல் அதிகாரி முதன்மை அலுவலா் ஸ்ரீதா் வேம்பு, மயிலாடுதுறை ஆஞ்சனேயா் மடம் வாயுசித்த ராமானுஜ ஜீயா், பத்தரகாசி சாக்தாநந்த சரஸ்வதி சுவாமிகள், விவேகம் அறக்கட்டளை நிா்வாகிகள் ராஜேந்திரன், வெற்றிவேல், சுரேந்திரன், சுரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பட வரி...

ஒசூரில் நடைபெற்ற வள்ளலாா் விழாவில் பேசுகிறாா் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.