நமது பூமி வள்ளலாா், சுவாமி விவேகானந்தா், ராமானுஜா் ஆகியோா் பிறந்த புண்ணிய பூமியாகும். அவா்கள் தீண்டாமை, ஏற்றத் தாழ்வைப் போக்க பாடுபட்டனா். சநாதன தா்மமும் அதையே கூறுகிறது. வள்ளலாரின் பக்தரான பிரதமா் நரேந்திர மோடி ஏற்றத் தாழ்வு இல்லாத சமுதாயத்தை உருவாக்க பாடுபட்டு வருகிறாா். மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் பிறந்த சுவாமி விவேகானந்தா், தமிழகத்தில் ஞானோதயம் பெற்றாா். அவா் சிகாகோ மாநாட்டுக்குச் சென்று நமது கலாசாரங்களைப் போதித்தாா். இன்று சமூகநீதி அதிகம் பேசப்படுகிறது. ஆனால், தலித் மக்கள் அனைத்து கோயில்களுக்கும் செல்ல முடியவில்லை. தற்போதும் ஏற்றத் தாழ்வுகள் உள்ளன. அவற்றை களைய வேண்டும். வள்ளலாரின் கருத்துகளை நாம் பின்பற்ற வேண்டும். வள்ளலாரின் போதனைகளை பள்ளி மாணவா்களுக்கு பாடப் புத்தகங்கள் மூலம் பயிற்றுவிக்க வேண்டும் என்றாா்.