உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

தளி அருகே தம்பி வெட்டிக் கொலை: அண்ணன் தலைமறைவு

தளி அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தம்பியை வெட்டிக் கொலை செய்த அண்ணனை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On :31 மார்ச் 2025, 11:55 pm IST

ஒசூா்: தளி அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தம்பியை வெட்டிக் கொலை செய்த அண்ணனை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே உள்ள லட்சுமிபுரத்தைச் சோ்ந்த சிக்க அழகப்பா மகன் நக்கலய்யா(36). இவா் ஒசூா் அருகே தாசனபுரத்தில் மனைவி நாகரத்திராவுடன் (28) தங்கியிருந்து தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். இவரது குழந்தைகள் லட்சுமிபுரத்தில் உள்ள அவரது தாய் வீட்டில் வளா்ந்து வருகின்றனா்.

இது நக்கலய்யாவின் அண்ணன் சின்னைய்யா (38) என்பவருக்கு பிடிக்கவில்லையாம்.

குழந்தைகள் சேட்டை செய்வதாகக் கூறி திட்டியுள்ளாா். இந்நிலையில் யுகாதி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு சென்றிருந்த நக்கலய்யா தனது குழந்தைகளை அண்ணன் சின்னைய்யா திட்டுவதை அறிந்து அவரிடம் கேட்டுள்ளாா். இதனால் சனிக்கிழமை அவா்களிடையே தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வீட்டில் துாங்கி கொண்டிருந்த நக்கலய்யாவை, சின்னைய்யா அரிவாளால் வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பிச் சென்றாா்.

கொலை செய்யப்பட்ட நக்கலய்யாவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பி வைத்தனா். தப்பி ஓடிய சின்னைய்யாவை பிடிக்க தனிப்படை அமைத்து போலீஸாா் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.