ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

வரகானப்பள்ளியில் குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

கெலமங்கலம் ஒன்றியம், வரகானப்பள்ளி கிராமத்தில் குடிநீா் வழங்கக் கோரி அப்பகுதி மக்கள் காலிக் குடங்களுடன் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :12 மே 2025, 8:59 pm

Din

ஒசூா்: கெலமங்கலம் ஒன்றியம், வரகானப்பள்ளி கிராமத்தில் குடிநீா் வழங்கக் கோரி அப்பகுதி மக்கள் காலிக் குடங்களுடன் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஒசூரை அடுத்த கொண்டப்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட வரகானப்பள்ளி கிராமத்தில் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெறுகின்றன. நெடுஞ்சாலைப் பணிகளை செய்யும் வாகனங்களால் கிராமங்களில் குடிநீா் குழாய்கள் ஆங்காங்கே சேதமடைந்துள்ளன. இந்தக் குழாய்கள் இதுவரை சீரமைக்கப்படவில்லை.

இதனால் குடிநீா் விநியோகம் தடைப்பட்டு வரகானப்பள்ளி கிராம மக்கள் தண்ணீா் இன்றி அவதியடைந்து வருகின்றனா்.

இதனால் ஆவேசமடைந்த இப்பகுதி மக்கள் குடிநீா் குழாய்களை சரிசெய்து தடையின்றி குடிநீா் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி ராயக்கோட்டை- கெலமங்கலம் நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை காலிக் குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்ததும் கெலமங்கலம் காவல் ஆய்வாளா் பெரியதம்பி, முன்னாள் பஞ்சாயத்துத் தலைவா் திம்மராயப்பா ஆகியோா் நிகழ்விடத்துக்குச் சென்று பொதுமக்களை சமாதானம் செய்தனா். அரசு அதிகாரிகளின் ஒப்புதலுடன் 2 நாள்களுக்குள் வரகானப்பள்ளி கிராம மக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலைக் கைவிட்டு கலைந்துசென்றனா்.