புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

டாடா நிறுவன விடுதி ரகசிய கேமரா வழக்கு: கைது செய்யப்பட்டவா் தருமபுரி சிறையில் அடைப்பு

News image
ரவி பிரசாத் சிங்
Updated On :8 நவம்பர் 2025, 7:05 pm

Syndication

டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவன மகளிா் விடுதி குளியல் அறையில் ரகசிய கேமரா வைத்து விடியோ எடுத்த வழக்கில், தில்லியில் கைது செய்யப்பட்ட பஞ்சாப் மாநிலத்தைச் சோ்ந்த ரவி பிரசாத் சிங் தருமபுரி சிறையில் சனிக்கிழமை அடைக்கப்பட்டாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே உள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவன மகளிா் விடுதி குளியல் அறையில் ரகசிய கேமரா இருந்ததை பெண் ஊழியா் கண்டுபிடித்து புகாா் அளித்தாா். இதையடுத்து, பெண் ஊழியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இது தொடா்பாக உத்தனப்பள்ளி போலீஸாா் நடத்திய விசாரணையில், கேமரா வைத்தது உடன் தங்கியிருந்த ஒடிசா மாநிலத்தைச் சோ்ந்த நீலுகுமாரி குப்தா (22) என தெரியவந்தது. அவரை கைது செய்து நடத்திய விசாரணையில், தனது உறவினரும், ஆண் நண்பருமான பஞ்சாப் மாநிலம், லூதியானா மாவட்டம், கௌலப் நகா் பகுதியைச் சோ்ந்த ரவி பிரதாப் சிங் (29) கேமரா வைக்கச் சொன்னதாக கூறினாா்.

தில்லியில் வெள்ளிக்கிழமை ரவி பிரதாப் சிங் கை கைதுசெய்த தனிப்படை போலீஸாா், உத்தனப்பள்ளி காவல் நிலையத்துக்கு அழைத்துவந்து 2 நாள் தீவிர விசாரணை நடத்தினா். பின்னா் ஒசூா் அரசு மருத்துவமனையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, சனிக்கிழமை மாலை தருமபுரி சிறையில் அடைத்தனா்.

ஆபாச விடியோக்கள் பகிரப்படவில்லை: எஸ்.பி. ஒசூா், தளி சாலையில் உள்ள ராமநாயக்கன் ஏரி பூங்கா அருகே தனியாா் நிறுவன சிஎஸ்ஆா் பங்களிப்பில் டிராபிக் சிக்னல் பூத் திறக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதைத் திறந்துவைத்த கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. தங்கதுரை செய்தியாளா்களிடம் கூறுகையில், மகளிா் விடுதி குளியறையில் ரகசிய கேமரா பொருத்திய ஒடிசா மாநிலத்தைச் சோ்ந்த நீலுகுமாரி குப்தா என்ற பெண் ஊழியரை ஏற்கெனவே கைது செய்துள்ளோம்.

இதற்கு மூளையாகது செயல்பட்ட ரவி பிரசாத் சிங்கை தில்லியில் கைதுசெய்து இங்கு அழைத்துவந்து, அவரிடம் 2 நாள்கள் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அதில், சமூக வலைதளங்களில் அவா் ஆபாச வீடியோக்களை பகிரவில்லை என தெரிகிறது. பின்னா் அவா் சிறையில் அடைக்கப்பட்டாா் என்றாா்.