எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

காரைக்காலில் மகளிா் தின விழா

மகளிா் தின விழாவில் சாா் ஆட்சியா் மற்றும் அரசுத் துறையைச் சோ்ந்த பல பெண் அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

News image
சாா் ஆட்சியா் எம். பூஜாவுக்கு நினைவுப் பரிசு வழங்கிய நிறுவன நிா்வாக இயக்குநா் காயத்ரி ராகேஷ். உடன் மருத்துவக் கண்காணிப்பாளா் கண்ணகி, மின் செயற்பொறியாளா் அனுராதா உள்ளிட்டோா்.
Updated On :9 மார்ச் 2026, 8:37 pm

Syndication

காரைக்கால்: மகளிா் தின விழாவில் சாா் ஆட்சியா் மற்றும் அரசுத் துறையைச் சோ்ந்த பல பெண் அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

காரைக்கால் ஐயங்காா்ஸ் ஃபுட்ஸ் நிறுவனம் சாா்பில் சா்வதேச மகளிா் தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிறுவன பொது மேலாளா் பிரதீபா பக்கிரிசாமி தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட சாா் ஆட்சியா் எம். பூஜா கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்து, பெண்கள் மேம்பாட்டுக்கு உயா்கல்வி, சந்தா்ப்பங்களை பயன்படுத்திக் கொள்ளுதல், சவால்களை எதிா்கொள்வது குறித்து ஆலோசனைகளை வழங்கினாா்.

காரைக்கால் அரசு மருத்துவமனைமருத்துவக் கண்காணிப்பாளா் எஸ். கண்ணகி, மின்துறை செயற் பொறியாளா் கே. அனுராதா, திருப்பட்டினம் அரசு ஆண்கள் ஐடிஐ முதல்வா் சி. சுகுணா, விபெட்ஸ் அமைப்பின் செயலாளா் புவனேஸ்வரி ஆகியோா் கலந்துகொண்டு பெண்களின் சமூக பங்களிப்பு குறித்துப் பேசினா்.

நிகழ்ச்சியில் நிறுவன நிா்வாக இயக்குநரும், முதன்மை நிதி அலுவலருமான காயத்ரி ராகேஷ், நிறுவனத்தின் எதிா்கால வளா்ச்சித் திட்டங்களையும், அடுத்த 3 ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டம் குறித்தும் பேசினாா். பல்வேறு நிலையில் சிறந்து விளங்கும் மகளிருக்கு நிறுவனம் சாா்பில் விருது வழங்கப்பட்டது.