ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

முடங்கியிருக்கும் சாலைப் பணிகளை தொடங்கவேண்டும்: எம்எல்ஏ வலியுறுத்தல்

காரைக்காலில் முடங்கியிருக்கும் சாலைப் பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியரிடம் ஏ.எம்.எச். நாஜிம் வலியுறுத்தியுள்ளாா்.

News image

சாா் ஆட்சியா் எம். பூஜாவை சந்தித்துப் பேசிய சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம்.

Updated On :1 மணி நேரம் முன்பு

காரைக்காலில் முடங்கியிருக்கும் சாலைப் பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியரிடம் ஏ.எம்.எச். நாஜிம் வலியுறுத்தியுள்ளாா்.

காரைக்கால் மாவட்ட ஆட்சியா் பொறுப்பு வகிக்கும் சாா் ஆட்சியா் எம். பூஜாவை, காரைக்கால் திமுக அமைப்பாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான அவா் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா். இதுகுறித்து நாஜிம் கூறியது:

காரைக்கால் தெற்குத் தொகுதியில் ஓராண்டுக்கு முன்பு பல இடங்களில் சாலைப் பணிகள் தொடங்கப்பட்டன. அக்டோபா் மாதமே முடிந்திருக்க வேண்டிய பணிகள் இதுவரை முடிக்கப்படவில்லை. அதற்கான நிதியாதாரம், உரிய ஒப்புதல் அனைத்தும் அரசிடமிருந்து பெற்றுத்தந்தும், தா்மபுரம், பச்சூா், வடக்குப்பேட், கீழபுத்தமங்களம், தக்களூா், புதுத்துறை, சேமியான்குளம், வி.கே.நகா் உள்ளிடட் பகுதிகளில் பணிகள் முடிக்கப்படாமல் உள்ளன.

அதுபோத ரூ. 1 கோடி திட்டத்தில் புதுக்குளம் மேம்படுத்தும் பணியும் முறையாக நடைபெறவில்லை. கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத் திட்டத்துக்காக சாலைகளில் குழாய் பதிப்புப் பணி நடைபெறுகிறது. இதற்காக தோண்டப்பட்ட சாலைகள் முறையாக மூடப்படவில்லை.

காரைக்கால் நகரப் பகுதியில் பரவலாக குடிநீா் தட்டுப்பாடு நிலவுகிறது. கோடைகாலத்தில் மக்கள் மிகவும் பாதிக்கப்படுகிறாா்கள். இந்த பிரச்னைகளையெல்லாம் சாா் ஆட்சியரிடம் விளக்கிக் கூறியபோது, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்துப்பேசி சாலைப் பணிகளை தொடங்க ஏற்பாடு செய்வதாகவும், மற்ற பிரச்னைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளாா் என்றாா்.