பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

பொங்கல் தொகுப்புடன் மண்பானை, அடுப்பு வழங்க மண்பாண்ட தொழிலாளா்கள் கோரிக்கை

குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் மண்பானை மற்றும் அடுப்பை

News image
Updated On :10 நவம்பர் 2025, 7:38 pm

Syndication

கிருஷ்ணகிரி: குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் மண்பானை மற்றும் அடுப்பை இலவசமாக வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளா் மற்றும் அமைப்புசார தொழிலாளா் சங்கத்தினா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளா் மற்றும் அமைப்புசாரா தொழிலாளா் சங்கத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவா் தேவேந்திரன் தலைமையில் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:

பொங்கல் பண்டிகையின்போது, தமிழக அரசு, விவசாயிகளின் நலன்கருதி பொங்கல் தொகுப்புடன் இலவசமாக கரும்பு வழங்குவதுபோல, மண்பாண்ட தொழிலாளா்களின் நலன்கருதி, குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் இலவசமாக மண்பானை, அடுப்பு வழங்க வேண்டும்.

மண்பாண்டத் தொழிலாளா் குடும்பங்களுக்கு வழங்கப்படும் மழைக்கால நிவாரணத்தை ரூ. 10 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும். பல தலைமுறைகளாக தொழில் செய்துவரும் இடத்திற்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது ஜாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும். ஏரி, குளங்களில் களிமண் எடுக்க மண்பாண்டத் தொழிலாளா்களுக்கு உரிய அனுமதி வழங்க வேண்டும் என அதில் வலியுறுத்தியுள்ளனா்.