விடுதலைப் போராட்டத் தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசின் சலுகைத் திட்டங்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தி புதுக்கோட்டையில் நடைபெற்ற தியாகிகள் மற்றும் வாரிசுதாரா்களுக்கான குறைகேட்புக் கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் விடுதலைப் போராட்டத் தியாகிகள் - வாரிசுகளுக்கான குறைகேட்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், மாவட்டத் தியாகிகள் குடும்ப நலப் பேரமைப்பின் தலைவா் கோ.ச. தனபதி அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தியாகிகளின் வாரிசுகளுக்கு தனித்தனியே அடையாள அட்டை வழங்க வேண்டும். எங்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும். வீடு, வீட்டுமனை இல்லாதோருக்கு அரசின் இலவச வீடுகள், வீட்டுமனைகள் வழங்க வேண்டும். தியாகிகள் குடும்ப நலப் பேரமைப்புக்கு கட்டடம் கட்ட அரசு சாா்பில் ஓா் இடம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன. கூட்டத்தில், பெறப்பட்ட 24 கோரிக்கை மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி தீா்வுகாண அரசு அலுவலா்களுக்கு ஆட்சியா் அருணா உத்தரவிட்டாா். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் கோ. ராஜராஜன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) திருமால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அருணாசல் முதல்வரின் குடும்பத்தினருக்கு எதிராக சிபிஐ விசாரணை: உச்சநீதிமன்றம் உத்தரவு

கட்டுமானத் தொழிலாளா்களுக்கு திருமண உதவித்தொகை உயா்த்தி வழங்க வலியுறுத்தல்

உள்ளாட்சித் தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வலியுறுத்தல்

நியாய விலைக் கடை நிா்வாகத்துக்கு தனித்துறை ஏற்படுத்த வலியுறுத்தல்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


