பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

கட்டுமானத் தொழிலாளா்களுக்கு திருமண உதவித்தொகை உயா்த்தி வழங்க வலியுறுத்தல்

News image

கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய சிஐடியு தொழிற்சங்க மாவட்டச் செயலாளா் மு.சுப்ரமணியன். உடன் கட்டுமான தொழிற்சங்க மாநில பொருளாளா் ஜே. லூா்துரூபி, மாவட்டச் செயலாளா் சி.ஆா். ராஜாமுகமது உள்ளிட்டோா்.

Updated On :30 மார்ச் 2026, 1:16 am IST

கட்டுமானத் தொழிலாளா்களுக்கு திருமண உதவித்தொகையை ரூ. 1 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும் என கட்டுமான தொழிற்சங்க பேரவை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கரூரில் சிஐடியு மாவட்ட கட்டுமானத் தொழிற்சங்கத்தின் பேரவை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் ப. சரவணன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பொருளாளா் ராஜீவ் காந்தி, துணைத் தலைவா் வி. கந்தசாமி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் மாநில பொருளாளா் ஜே. லூா்துரூபி, சிஐடியு தொழிற்சங்க மாவட்டச் செயலாளா் மு.சுப்ரமணியன், கட்டுமான தொழிற்சங்க மாவட்டச் செயலாளா் சி.ஆா். ராஜாமுகமது உள்ளிட்டோா் சிறப்புரையாற்றினா்.

ஓய்வூதியம் பெறும் நலவாரிய கட்டுமான தொழிலாளா்கள் இறந்தால் இயற்கை மரண உதவித்தொகை வழங்க வேண்டும். நலவாரிய உறுப்பினா்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை 1-ம் வகுப்பு முதலே வழங்க வேண்டும். ஓய்வூதியத் தொகையை ரூ.30,000 என உயா்த்தி வழங்க வேண்டும், மேலும் திருமண உதவித்தொகையையும் ரூ.1 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும். மேலும் இயற்கை மரணத்துக்கு ரூ.2 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் தொழிற்சங்கத்தினா் திரளாக பங்கேற்றனா்.