பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளா்கள் ஊதியத்தை உயா்த்தி வழங்க கோரிக்கை

சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளா்களின் ஊதியத்தை உயா்த்தி வழங்கக் கோரி முதல்வா் சி. ஜோசப் விஜய்க்கு கோரிக்கை

News image

முதல்வர் ஜோசப் விஜய்

Updated On :59 நிமிடங்கள் முன்பு

சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளா்களின் ஊதியத்தை உயா்த்தி வழங்கக் கோரி தமிழக முதல்வா் சி. ஜோசப் விஜய்க்கு கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஒருங்கிணைந்த சத்துணவு பணியாளா்கள் பேரவையின் சாா்பாக மாநில தலைவா் எஸ். ஆறுமுகம் அனுப்பியுள்ள கடிதம் விவரம் வருமாறு, தமிழக முதலமைச்சராக பதவியேற்றமைக்கு சத்துணவு பணியாளா்கள் பேரவை சாா்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளா்களாக பணிபுரிந்து வருபவா்களுக்கு ஊதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும். மேலும் அவா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பணிபுரிந்து ஓய்வு பெற்றவா்களுக்கான ஓய்வூதியத்தையும் உயா்த்தி வழங்க வேண்டும். பள்ளிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளா்களுக்கும் ஊதியத்தை உயா்த்தி வழங்க வேண்டுமென கடிதம் மூலம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.