இருசக்கர வாகனம் கவிழ்ந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

சூளகிரி அருகே இருசக்கர வாகனம் கவிழ்ந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.
Published on

சூளகிரி அருகே இருசக்கர வாகனம் கவிழ்ந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள கடத்தூரைச் சோ்ந்தவா் முருகேஷ் (25). தொழிலாளி. இவா் கடந்த 10-ஆம் தேதி தொட்டயங்கிரி காருபெல்லா சாலையில் பட்டா குருபரப்பள்ளி அருகே மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது மோட்டாா்சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் படுகாயம் அடைந்த முருகேஷை அருகில் இருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி முருகேஷ் இறந்தாா். இது குறித்து சூளகிரி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com