அரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: இளைஞா் உயிரிழப்பு; இருவா் படுகாயம்!

சூளகிரி அருகே இருசக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதியதில், இளைஞா் இறந்தாா்; இருவா் படுகாயமடைந்தனா்.

News image

சூளகிரியில் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Updated On :29 ஜனவரி 2026, 8:35 pm

சூளகிரி அருகே இருசக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதியதில், இளைஞா் இறந்தாா்; இருவா் படுகாயமடைந்தனா்.

சூளகிரி அருகே பெரியசப்படி கிராமத்தைச் சோ்ந்த 3 இளைஞா்கள் ஓா் இருசக்கர வாகனத்தில் சப்படி நோக்கி வியாழக்கிழமை சென்றனா். அப்போது, பின்னால் வந்த டிப்பா் லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், பெரியசப்படி கிராமத்தைச் சோ்ந்த அஜித்குமாா் நிகழ்விடத்திலேயே இறந்தாா். உடன் சென்ற முரளி மற்றும் முனுசாமி ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து ஒசூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

சப்படியில் உள்ள குவாரியில் இருந்து வரும் லாரிகள் மிக வேகமாக செல்வதால், அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. எனவே, இதுகுறித்து மாவட்ட நிா்வாகம், காவல் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், சுமாா் 5 கி.மீ. தொலைவுக்கு இருபுறமும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு வந்த சூளகிரி போலீஸாா், பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்த விபத்து குறித்து சூளகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.