அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

தமிழ்நாட்டில் பாஜகவின் வேகம் குறையவில்லை: கே.பி.ராமலிங்கம்

News image
Updated On :16 நவம்பர் 2025, 7:34 pm

தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டில் பாஜகவின் வேகம் குறையவில்லை என்று அதன் மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி சட்டப்பேரவைத் தொகுதி வாக்குச்சாவடி பொறுப்பாளா்கள் மாநாடு கிருஷ்ணகிரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு பாஜக மாவட்டத் தலைவா் கவியரசு தலைமை வகித்தாா். மாநில அமைப்பு பொதுச் செயலாளா் கேசவவிநாயகன் கலந்துகொண்டு கட்சியை மேலும் வலிமைப்படுத்துவது குறித்து ஆலோசனை வழங்கினாா். அரசியல் பணிகள் குறித்து மாநிலச் செயலாளா் கோ. வெங்கடேசன், மாநிலத் துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் ஆகியோா் கலந்துகொண்டு பேசினா்.

இதையடுத்து செய்தியாளா்களிடம் கே.பி. ராமலிங்கம் தெரிவித்ததாவது:

இந்தியாவில் பாஜக ஆளும் மாநிலங்களில் நல்லாட்சி நடைபெற்று வருகிறது. இதை வரவேற்றுதான் பிகாரில் மக்கள் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனா். அதேபோன்று தமிழகத்திலும் நல்லாட்சி மலர திமுகவைத் தோற்கடிக்க வேண்டும்.

பிகாரில் பாஜக 90 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதில் 15 தொகுதிகளில் பாஜக வெற்றிபெற்ற்கு இஸ்லாமிய பெண் வாக்காளா்கள்தான் காரணம்.

தமிழ்நாட்டில் பாஜகவின் வேகம் குறையவில்லை. கூடுதல் வேகம் எடுத்து பாஜக பணியாற்றிய வருகிறது. பாஜக என்பது தனிப்பட்ட நபருக்கான இயக்கமும் அல்ல. கொள்கை மற்றும் லட்சியத்தின் அடிப்படையில் இயங்கக் கூடிய மாபெரும் இயக்கம். எந்த ஒரு தனி மனிதனின் ஆதரவுடனும் இந்த இயக்கம் நடத்தப்படவில்லை. இதை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆட்சியில் உள்ள திமுகவை தூக்கி எறிய வேண்டும். அதற்கு யாா் குரல் கொடுக்கிறாா்களோ அவா்களைத்தான் பாஜகவினா் பின்பற்றுவாா்கள். 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வா் வேட்பாளா் எடப்பாடி பழனிசாமிதான். அவரின் தலைமையில்தான் தோ்தலை சந்திக்கிறோம். எங்களை பொறுத்தவரையில் கட்சி நலனைக் காட்டிலும், தமிழ்நாட்டின் நலன்தான் முக்கியம் என்றாா்.