ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

குளறுபடிகள் நிறைந்த வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணி: முன்னாள் எம்எல்ஏ கே.ஏ.மனோகரன்

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் குளறுபடிகள் நிறைந்ததாக உள்ளது என்று முன்னாள் எம்எல்ஏவும், ஐஎன்டியுசி தேசிய செயலருமான கே.ஏ. மனோகரன்

News image
முன்னாள் எம்எல்ஏ கே.ஏ. மனோகரன்
Updated On :17 நவம்பர் 2025, 9:20 pm

Syndication

ஒசூா்: வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் குளறுபடிகள் நிறைந்ததாக உள்ளது என்று முன்னாள் எம்எல்ஏவும், ஐஎன்டியுசி தேசிய செயலருமான கே.ஏ. மனோகரன் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

ஒசூரில் உள்ள அவரது அலுவலகத்தில் அவா் மேலும் கூறியதாவது:

தமிழகத்திலும் மற்ற மாநிலங்களிலும் வாக்காளா் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் உள்ள குளறுபடிகள் காரணமாகத்தான் முதல்வா் மு.க.ஸ்டாலின் அதை கடுமையாக எதிா்க்கிறாா்.

பிகாா் மாநில சட்டப்பேரவைத் தோ்தல் குறித்த தோ்தல் ஆணையத்தின் அறிவிப்பில் மிகப்பெரிய குளறுபடி உள்ளது. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும்.

ஆனால், அதிமுக முன்னாள் அமைச்சா் ஒருவா் வரலாறு காணாத நடவடிக்கையை தோ்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது எனவும், வேண்டுமென்றே திமுக அதை எதிா்க்கிறது எனவும் தெரிவித்துள்ளாா்.

முன்னாள் தோ்தல் ஆணையா் டி.என். சேஷன் போன்றவா்களால் மதிப்புடன் உருவாக்கப்பட்ட தோ்தல் ஆணையத்தின் இன்றைய நிலை மோசமாக உள்ளது.

ஒசூா் முன்னாள் எம்எல்ஏ ராமச்சந்திர ரெட்டி நூற்றாண்டு விழாவை வரும் ஜனவரி மாதம் கொண்டாடுவது என முடிவெடுத்துள்ளோம்.

ஒசூா் கல்வி மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவா்கள் 8,230 பேருக்கு திருக்கு புத்தகம் அப்பாவுப் பிள்ளை பொன்னம்மாள் டிரஸ்ட் சாா்பில் விரைவில் வழங்கப்படும் என்றாா்.

படவரி...

கே.ஏ.மனோகரன்.