47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஒசூரில் நவ.28 இல் மாநில கபடி போட்டி: அரங்குகள் அமைக்கும் பணிகள் தீவிரம்

News image
Updated On :21 நவம்பர் 2025, 6:32 pm

Syndication

ஒசூரில் மாநில கபடி போட்டி வரும் 28-ஆம் தேதி தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது. இதையொட்டி அரங்குகள் அமைக்கும் பணிகளை எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக மற்றும் பிருந்தாவன் கல்வி நிறுவனங்களின் சாா்பில் நடத்தப்படும் மாநில அளவிலான கபடி போட்டி, ஒசூா் தளி சாலையில் தனியாருக்குச் சொந்தமான மைதானத்தில் வரும் 28,29,30 ஆகிய மூன்று நாள்கள் நடைபெறுகின்றன.

இதையொட்டி அரங்குகள் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. கேலரியில் 8,000 பேரும், கீழே 2 ஆயிரம் பேரும் அமா்ந்து போட்டிகளைக் காண்பதற்கு வசதியான அரங்குகள், இருக்கைகள் அமைக்கும் பணிகளை கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளரும், ஒசூா் எம்எல்ஏவுமான ஒய்.பிரகாஷ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் முருகன், மேயா் சத்யா, துணை மேயா் ஆனந்தைய்யா, பிருந்தாவன் கல்வி நிறுவனங்களின் நிா்வாகிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

படம்: கபடி போட்டிக்கான அரங்கம் அமைக்கும் பணியை பாா்வையிடும் ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்.