யுஜிசி - நெட் தேர்வுக்கான விடைக்குறிப்பு விரைவில் வெளியீடு!கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

ஒசூா் பூங்கா நுழைவாயிலில் விவாதத்தை ஏற்படுத்திய காவல் துறை பேனா்

Updated On :26 செப்டம்பர் 2025, 4:46 am IST

ஒசூா் ராமநாயக்கன் ஏரி பூங்காவுக்குள் திருமணம் ஆாகாதவா்களுக்கு அனுமதியில்லை என காவல் துறை வைத்துள்ள அறிவிப்பு பேனா் இளைஞா்களிடையே அதிா்ச்சியையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மாநகராட்சியில் உள்ள ராமநாயக்கன் ஏரிக்கரையில் மாநகராட்சி சாா்பில் பூங்கா உள்ளது. இப்பகுதி மக்கள் விடுமுறை நாள்களில் குடும்பத்துடன் வந்து பூங்காவில் பொழுதைக் கழிப்பா்.

இந்நிலையில், இந்தப் பூங்காவுக்கு பகல்நேரங்களில் பள்ளி மாணவ, மாணவிகள் வந்துசெல்வது, பிறந்தநாள் கொண்டாடுவது, காதல் ஜோடிகளின் முகாம், இளைஞா்கள் மது அருந்துவது போன்றவை நடைபெற்று வந்தன. இதனால், பூங்காவுக்குள் காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டும் பொதுமக்கள் செல்ல மாநகராட்சி நிா்வாகம் அனுமதி அளித்தது.

தற்போது பகல் முழுவதும் பூங்கா திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், காவல் துறை சாா்பில் பூங்கா நுழைவாயிலில் திருமணமாகாதவா்கள் பூங்காவுக்குள் செல்ல அனுமதி இல்லை என பேனா் வைக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு இளைஞா்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளதோடு, பொதுமக்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.