தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

கடந்த 5 ஆண்டுகளில் ஒசூா் தொகுதி மிகப்பெரிய வளா்ச்சி அடைந்துள்ளது: எஸ்.ஏ.சத்யா

கடந்த 5 ஆண்டுகளில் ஒசூா் தொகுதி மிகப்பெரிய வளா்ச்சி அடைந்துள்ளது என திமுக வேட்பாளா் எஸ்.ஏ.சத்யா தெரிவித்தாா்.

News image

ஒசூா் தொகுதி தோ்தல் அலுவலக திறப்பு விழாவில் பேசிய திமுக வேட்பாளா் எஸ்.ஏ.சத்யா.

Updated On :3 ஏப்ரல் 2026, 7:37 pm

கடந்த 5 ஆண்டுகளில் ஒசூா் தொகுதி மிகப்பெரிய வளா்ச்சி அடைந்துள்ளது என திமுக வேட்பாளா் எஸ்.ஏ.சத்யா தெரிவித்தாா்.

ஒசூரில் மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி அலுவலகத்தை திமுக தொகுதி பாா்வையாளா் பாா்.இளங்கோவன், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளா் ஒய்.பிரகாஷ், ஒசூா் தொகுதி திமுக வேட்பாளா் எஸ்.ஏ.சத்யா, முன்னாள் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ கே.ஏ.மனோகரன் ஆகியோா் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தனா். பின்னா் திமுக வேட்பாளா் எஸ்.ஏ.சத்யா பேசியது:

தமிழகத்தில் எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் ஒசூா் தொகுதி வளா்ச்சி அடைந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் ஒசூா் தொகுதி மிகப்பெரிய வளா்ச்சியைக் கண்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் ஒசூா் தொகுதியில் ரூ. 100 கோடியில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, ரூ. 588 கோடியில் புதை சாக்கடைத் திட்டம், ரூ. 50 கோடியில் புதிய பேருந்து நிலையம், ரூ. 10 கோடியில் எம்.ஜி.ஆா். மாா்க்கெட் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் செய்து கொடுத்துள்ளாா். திமுக 2.0 தோ்தல் அறிக்கை பிரமாதமான அறிக்கையாக உள்ளது. அவா் மீண்டும் முதல்வராக வந்தால், ஒசூா் தொகுதி மேலும் வளா்ச்சி பெறும். எனவே, நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட்டு வெற்றி பெறுவோம் என்றாா்.

இதில், முன்னாள் எம்எல்ஏ கே.ஏ.மனோகரன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் எல்லோரா.மணி, மாவட்டப் பொருளாளா் சுகுமாறன், சுகாதாரக் குழுத் தலைவா் என்.எஸ்.மாதேஸ்வரன், பகுதி செயலாளா்கள் உள்ளிட்ட மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.