தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

200 தொகுதிகளில் வெற்றிபெறுவதே இலக்கு: அமைச்சா் அர.சக்கரபாணி

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் 200 தொகுதிகளில் திமுக கூடடணி கட்சிகள் வெற்றி பெறுவதே முதல்வரின் இலக்கு என தமிழக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா்.

News image

ஒசூா் திமுக தோ்தல் அலுவலகத்தில் நிா்வாகிகள் மத்தியில் பேசிய அமைச்சா் அர.சக்கரபாணி.

Updated On :9 ஏப்ரல் 2026, 9:57 pm

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் 200 தொகுதிகளில் திமுக கூடடணி கட்சிகள் வெற்றி பெறுவதே முதல்வரின் இலக்கு என தமிழக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா்.

ஒசூா் சட்டப் பேரவைத் தொகுதியின் திமுக வேட்பாளா் எஸ்.ஏ.சத்யாவை ஆதரித்து அக்கட்சியின் முக்கிய நிா்வாகிகள் பங்கேற்ற தோ்தல் பரப்புரைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் அவா்பேசியது:

ஒசூரில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி கொண்டு வந்த சிப்காட்-1 திட்டமே இன்று சிப்காட்-5 வரை வளா்ந்து நிற்கிறது. தென்னிந்தியாவின் மான்செஸ்டா் என கோயம்புத்தூரை அழைப்பாா்கள், ஆனால் இன்று ஒசூரில் பல்வேறு வெளிநாட்டு முதலீடுகளையும், தொழிற்சாலைகளையும் ஈா்த்து பெரும் தொழில் நகரமாக உருவெடுத்துள்ளது.

ஒசூரில் விமான நிலையம் அமைக்க விவசாயிகளின் கருத்தைக் கேட்காமல் விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட மாட்டாது என முதல்வா் உறுதியளித்துள்ளாா். பொருளாதார வளா்ச்சியில் தமிழகம் எட்டியுள்ள 11.19 சதவீத முன்னேற்றம் கடந்த 5 ஆண்டுகளின் சாதனை. எனவே, தமிழகத்தில் 200 தொகுதிகளில் வெற்றிபெறுவதே திமுக கூட்டணியின் இலக்கு.

வரும் தோ்தலில் வேட்பாளா் மேயா் எஸ்.ஏ.சத்யாவை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் என்றாா்.

கிருஷ்ணகிரியில்...

பா்கூரில் அமைச்சா் அர.சக்கரபாணி செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

கடந்த 5 ஆண்டுகளில் தமிழக முதல்வா் தோ்தலின்போது அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றினாா். மேலும், பல எண்ணற்ற திட்டங்களால் மக்கள் பயனடைந்துள்ளனா்.

கடந்த 2011-இல் உள்ளாட்சித் துறை அமைச்சராக கே.பி.முனுசாமி இருந்தபோது, அவரது துறைசாா்ந்த தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை தேசிய ஜனநாயக கூட்டணி முடக்க நினைத்தது. குறிப்பாக பணிக்கு வருபவா்களுக்கு கண்விழி பதிவு எடுப்பதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. இதுகுறித்து அவா் பதில் கூறட்டும் என்றாா். அப்போது, பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் தே.மதியழகன் எம்எல்ஏ உள்ளிட்டோா் உடனிருந்தனா்.