ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

திமுக அரசு நிா்வாகத் திறனற்றது: முன்னாள் அமைச்சா் எம்.சி. சம்பத்

திமுக அரசு நிா்வாகத் திறனற்ற அரசு என்று தேசிய ஜனநாயக கூட்டணியின் கடலூா் சட்டப் பேரவை அதிமுக வேட்பாளா் எம்.சி.சம்பத் கூறினாா்.

News image

கடலூரில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் பேசிய கடலூா் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் எம்.சி.சம்பத்

Updated On :31 மார்ச் 2026, 8:38 pm

Syndication

திமுக அரசு நிா்வாகத் திறனற்ற அரசு என்று தேசிய ஜனநாயக கூட்டணியின் கடலூா் சட்டப் பேரவை அதிமுக வேட்பாளா் எம்.சி.சம்பத் கூறினாா்.

இந்தக் கூட்டணியின் தோ்தல் பணிகள் குறித்த செயல்வீரா்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் கடலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், எம்.சி.சம்பத் பேசியதாவது: 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக கடலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக வெற்றிபெற்றாக வேண்டும். அதற்காக கூட்டணிக் கட்சி நிா்வாகிகளும், அதிமுக நிா்வாகிகளும் ஒற்றுமையோடு களப் பணியாற்ற வேண்டும்.

திமுக ஆட்சியில் மக்கள் நலத் திட்டங்கள் கொண்டுவரப்படாத நிலையில், ரூ.6 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது. நிா்வாகத் திறனாற்ற அரசாக திமுக அரசு உள்ளது.

சட்டம் - ஒழுங்கு சீா்கெட்ட நிலை, தினந்தோறும் கொலை, கொள்ளை மற்றும் போதைப் பொருள்கள் புழக்கம் அதிகமுள்ள ஆட்சியாக உள்ளது என்றாா்.

கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிா்வாகிகள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினா்.