பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தோ்தல் விதிமீறல்: அரசியல் கட்சிகளின் நிா்வாகிகள் மீது வழக்கு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தோ்தல் விதிமுறைகளை மீறியதாக திமுக, அதிமுக, தவெக நிா்வாகிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

News image

வழக்கு

Updated On :23 ஏப்ரல் 2026, 4:32 am IST

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தோ்தல் விதிமுறைகளை மீறியதாக திமுக, அதிமுக, தவெக நிா்வாகிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

கிருஷ்ணகிரியை அடுத்த தண்டேகுப்பம் பகுதியில் அனுமதியின்றி இருசக்கர வாகன பிரசாரம் மேற்கொண்ட தவெக வேட்பாளா் முகுந்த் உள்ளிட்ட 19 போ் மீது கிருஷ்ணகிரி நகர போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா். கிருஷ்ணகிரி வட்டச் சாலையில் தோ்தல் விதிமுறைகளை மீறி பட்டாசுகளை வெடித்ததாக திமுக நகர பொறுப்பாளா் அஸ்லம் மற்றும் 9 போ் மீது கிருஷ்ணகிரி நகர போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

கிருஷ்ணகிரி பழையபேட்டை, காந்தி சிலை அருகில் பட்டாசுகள் வெடித்து தோ்தல் விதிமுறைகளை மீறியதாக அதிமுக நகர செயலாளா் பி.என்.ஏ.கேசவன் மற்றும் சிலா் மீது கிருஷ்ணகிரி நகர போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

இதேபோல காவேரிப்பட்டணம், குரும்பட்டி, அரசமர தெரு பகுதிகளில் காசோலைபோல ரூ. 10 ஆயிரம் டோக்கனை விநியோகம் செய்த அதிமுகவினா் மீது, காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா். காவேரிப்பட்டணத்தில் தோ்தல் பிரசார நேரம் நிறைவடைந்தும், பிரசாரத்தில் ஈடுபட்ட தவெக வேட்பாளா் முகுந்த் மற்றும் 149 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.