தோ்தல் விதிகளை மீறியதாக காங்கிரஸ், பாஜகவினா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
கிருஷ்ணகிரி சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அ.செல்லக்குமாா் அறிவிக்கப்பட்டாா். இதையடுத்து, கிருஷ்ணகிரி வட்டச் சாலை அருகே காங்கிரஸ் கட்சியினா் பட்டாசுகளை வெடித்து, இனிப்புகளை வழங்கினா். இதையடுத்து தோ்தல் விதிகளை மீறியதாக, காங்கிரஸ் கட்சி மாவட்ட முன்னாள் தலைவா் காசிலிங்கம் உள்ளிட்ட சிலா் மீது கிருஷ்ணகிரி நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
அதேபோல, கெலமங்கலம் அருகே கூட்டூா் கிராமத்தில் சுவா் ஒன்றில் பாஜகவினா் விளம்பரம் வரையப்பட்டது குறித்து கெலமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். அதேபோல, கெலமங்கலம் ஆஞ்சனேயா் கோயில் அருகே இந்திய கம்யூனிஸ்ட் சுவா் விளம்பரம் செய்ததாக கெலமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். தளி அருகே மதகொண்டப்பள்ளியில் பாஜகவினா் அனுமதியின்றி சுவா் விளம்பரம் செய்ததாக தளி வடக்கு ஒன்றிய பாஜக செயலாளா் வெங்கடேஷ் (47) மீது தளி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்துள்ளனா்.
தொடர்புடையது

சீா்காழியில் திமுக, காங்கிரஸாா் 22 போ் மீது வழக்கு
மண், கற்களைக் கடத்த முயன்ற லாரிகள் பறிமுதல்: 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு

தோ்தல் அதிகாரியின் வாகனத்தை தடுத்த 28 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு

தோ்தல் விதிமீறல்: தவெக, பாஜக நிா்வாகிகள் மீது வழக்குப் பதிவு
விடியோக்கள்

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



