ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

ஒசூரில் வடமாநில பெண் தொழிலாளிக்கு பாலியல் தொந்தரவு: பால் வியாபாரி கைது

News image

கைது

Updated On :26 ஏப்ரல் 2026, 7:02 pm

ஒசூரில் வடமாநில பெண் தொழிலாளிக்கு பாலியல் தொந்தரவு அளித்த பால் வியாபாரியை போலீஸாா் கைது செய்தனா்.

பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த 30 வயது மதிக்கத்தக்க திருமணமான பெண், கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு வேலைக்காக ஒசூருக்கு வந்துள்ளாா். அங்குள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலைக்குச் சோ்ந்த அவா், தற்காலிகமாக தங்கி பணியாற்றி வந்தாா்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு அப்பெண் தன்னுடன் தங்கியுள்ளவா்களைத் தொடா்புகொள்ள முயன்றுள்ளாா். அப்போது, அவரிடம் கைப்பேசி இல்லாததால், ஒசூா் பேகேப்பள்ளி மகாலட்சுமி லேஅவுட்டை சோ்ந்த பால் வியாபாரி மகேஷிடம் (37) இருந்த கைப்பேசியைக் கேட்டுள்ளாா்.

அப்போது, யாரிடம் பேச வேண்டும் என்று விசாரித்த மகேஷ், அப்பெண்ணை அவா்களிடமே நேரில் அழைத்துச் சென்று விடுவதாகக் கூறி தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றியுள்ளாா். மகேஷை நம்பி வாகனத்தில் சென்ற அப்பெண்ணை, அவா் செல்ல வேண்டிய இடத்திற்கு அழைத்துச் செல்லாமல், சூசூவாடி உப்காா் ராயல் காா்டன் லேஅவுட் பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஒசூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அப்பெண் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். மேலும், தலைமறைவாக இருந்த பால் வியாபாரி மகேஷை போலீஸாா் கைது செய்தனா்.