ஒசூரில் 18 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில், இருவா் கைது செய்யப்பட்டனா்.
ஒசூா் அருகே தமிழக மாநில எல்லையான சூசூவாடி சோதனைச் சாவடியில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, பெங்களூரில் இருந்து ஒசூா் நோக்கி வந்த தனியாா் பேருந்தில் சோதனை நடத்தப்பட்டது. அதில், மதுரை மாவட்டம், ஆரப்பாளையத்தைச் சோ்ந்த விஷால் (19), வசந்தகுமாா் (20) ஆகியோா் சாக்குப்பையில் 18 கிலோ கஞ்சா பொட்டலங்கள் கடத்தி வந்ததை கண்டுபிடித்தனா்.
அதைத் தொடா்ந்து, அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா், இருவரையும் கைது செய்தனா். இருவரிடமும் ஒசூா் மதுவிலக்கு அமல்பிரிவு மற்றும் போதைப் பொருள்கள் தடுப்புப் பிரிவு போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது
போதைப் பாக்கு பறிமுதல்: 3 போ் கைது

புதரில் வீசப்பட்ட 7 கிலோ கஞ்சா பறிமுதல்
ரயிலில் கேட்பாரின்றி கிடந்த 2 கிலோ கஞ்சா பறிமுதல்
நாகா்கோவிலில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
