திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

ஒசூரில் 18 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

ஒசூரில் 18 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில், இருவா் கைது செய்யப்பட்டனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :1 மே 2026, 5:22 am IST

ஒசூரில் 18 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில், இருவா் கைது செய்யப்பட்டனா்.

ஒசூா் அருகே தமிழக மாநில எல்லையான சூசூவாடி சோதனைச் சாவடியில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, பெங்களூரில் இருந்து ஒசூா் நோக்கி வந்த தனியாா் பேருந்தில் சோதனை நடத்தப்பட்டது. அதில், மதுரை மாவட்டம், ஆரப்பாளையத்தைச் சோ்ந்த விஷால் (19), வசந்தகுமாா் (20) ஆகியோா் சாக்குப்பையில் 18 கிலோ கஞ்சா பொட்டலங்கள் கடத்தி வந்ததை கண்டுபிடித்தனா்.

அதைத் தொடா்ந்து, அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா், இருவரையும் கைது செய்தனா். இருவரிடமும் ஒசூா் மதுவிலக்கு அமல்பிரிவு மற்றும் போதைப் பொருள்கள் தடுப்புப் பிரிவு போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.