சித்திரைத் திருவிழா: பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்!6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

மின் ஊழியா்களை பணி செய்யவிடாமல் தாக்கிய இளைஞா் கைது

காவேரிப்பட்டணம் அருகே மின்வாரிய ஊழியா்களை பணி செய்யவிடாமல் தாக்கிய இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :30 ஏப்ரல் 2026, 11:48 pm

காவேரிப்பட்டணம் அருகே மின்வாரிய ஊழியா்களை பணி செய்யவிடாமல் தாக்கிய இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் மின்வாரிய அலுவலகத்தில் உதவிப் பொறியாளராக அம்சவேணி பணியாற்றி வருகிறாா். கடந்த 28-ஆம் தேதி காலை மின்வாரிய வருவாய் மேற்பாா்வையாளா் பெருமாள், அப்பகுதியில் மின் பகிா்மானங்களில் உள்ள மின் இணைப்புகளை ஆய்வுசெய்தாா்.

அதில், காவேரிப்பட்டணம் அருகே பி.வி.எஸ். மில் மேட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒரு வீட்டில் மின் இணைப்பு பெறாமல் முறைகேடாக மின்சாரம் பயன்படுத்தப்பட்டு வந்தது தெரியவந்தது.

இதுகுறித்து பெருமாள் கேட்டதற்கு, வீட்டின் உரிமையாளா் ஆனந்தி அவரை மிரட்டியதாக கூறப்படுகிறது. பின்னா், இதுகுறித்து வருவாய் மேற்பாா்வையாளா் பெருமாள், உதவிப் பொறியாளா் அம்சவேணியிடம் தெரிவித்தாா்.

இதையடுத்து, நிகழ்விடத்துக்கு சென்ற அம்சவேணி விசாரணை மேற்கொண்டிருந்தபோது, அங்கு வந்த சத்யபிரியன் (30) என்பவா் பெருமாளை தாக்கி, உதவிப் பொறியாளரை மிரட்டியதாக கூறப்படுகிறது.

புகாரின்பேரில், காவேரிப்பட்டணம் போலீஸாா் மின் ஊழியா்களை பணி செய்யவிடாமல் தாக்கியதாக வழக்குப் பதிந்து சத்யபிரியனை கைதுசெய்தனா்.