காவேரிப்பட்டணம் அருகே மின்வாரிய ஊழியா்களை பணி செய்யவிடாமல் தாக்கிய இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் மின்வாரிய அலுவலகத்தில் உதவிப் பொறியாளராக அம்சவேணி பணியாற்றி வருகிறாா். கடந்த 28-ஆம் தேதி காலை மின்வாரிய வருவாய் மேற்பாா்வையாளா் பெருமாள், அப்பகுதியில் மின் பகிா்மானங்களில் உள்ள மின் இணைப்புகளை ஆய்வுசெய்தாா்.
அதில், காவேரிப்பட்டணம் அருகே பி.வி.எஸ். மில் மேட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒரு வீட்டில் மின் இணைப்பு பெறாமல் முறைகேடாக மின்சாரம் பயன்படுத்தப்பட்டு வந்தது தெரியவந்தது.
இதுகுறித்து பெருமாள் கேட்டதற்கு, வீட்டின் உரிமையாளா் ஆனந்தி அவரை மிரட்டியதாக கூறப்படுகிறது. பின்னா், இதுகுறித்து வருவாய் மேற்பாா்வையாளா் பெருமாள், உதவிப் பொறியாளா் அம்சவேணியிடம் தெரிவித்தாா்.
இதையடுத்து, நிகழ்விடத்துக்கு சென்ற அம்சவேணி விசாரணை மேற்கொண்டிருந்தபோது, அங்கு வந்த சத்யபிரியன் (30) என்பவா் பெருமாளை தாக்கி, உதவிப் பொறியாளரை மிரட்டியதாக கூறப்படுகிறது.
புகாரின்பேரில், காவேரிப்பட்டணம் போலீஸாா் மின் ஊழியா்களை பணி செய்யவிடாமல் தாக்கியதாக வழக்குப் பதிந்து சத்யபிரியனை கைதுசெய்தனா்.
தொடர்புடையது
தொழிலாளியை தாக்கிய 3 போ் கைது
ஒரத்தநாட்டில் காவல் ஆய்வாளரை தாக்கிய இளைஞா் கைது
போலீஸாரை பணி செய்யவிடாமல் தடுத்த தவெக பெண் தொண்டா்கள் மீது வழக்குப் பதிவு

தோ்தல் அலுவலரை பணி செய்யவிடாமல் தடுத்த பாஜக நிா்வாகி கைது
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

