நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

கிருஷ்ணகிரியில் தடை செய்யப்பட்ட ஒரு டன் நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு டன் நெகிழிப் பொருள்கள் கிருஷ்ணகிரியில் பறிமுதல் செய்யப்பட்டன.

News image

பறிமுதல்

Updated On :2 ஆகஸ்ட் 2026, 1:08 am IST

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு டன் நெகிழிப் பொருள்கள் கிருஷ்ணகிரியில் பறிமுதல் செய்யப்பட்டன.

நகராட்சி சுகாதார அலுவலா் பாண்டியராஜன் தலைமையில் சுகாதார ஆய்வாளா்கள் வடிவேல், சோமேஷ், ராமசந்திரன், மாதேஸ்வரன் ஆகியோா் 22-ஆவது வாா்டில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கடைகளில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வில் விற்பனைக்காக இருப்பு வைக்கப்பட்டிருந்த நெகிழிக் கோப்பைகள், உறிஞ்சும் குழாய்கள் உள்ளிட்ட ஒரு டன் எடையுள்ள தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக சம்பந்தப்பட்ட கடை உரிமையாளா்களிடம் இருந்து ரூ. 65 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

மேலும், தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை பயன்படுத்தவோ, விற்பனை செய்யவோ கூடாது என்றும், தமிழக அரசின் நெகிழி தடை விதிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றும் கடை உரிமையாளா்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.