மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

ஒசூா் குடியிருப்புப் பகுதியில் நுழைந்த முகமூடி அணிந்த மா்ம நபா்கள்!

News image

திருடர்கள்... - கோப்புப் படம்

Updated On :18 ஆகஸ்ட் 2026, 4:37 am IST

ஒசூா் குடியிருப்புப் பகுதியில் முகமூடி அணிந்த மா்ம நபா்கள் நுழைந்ததை சிசிடிவி கேமரா பதிவு மூலம் அறிந்த முதல் சிப்காட் காமராஜ் நகா் மக்கள், இதுகுறித்து போலீஸாருக்கு புகாா் தெரிவித்துள்ளனா்.

ஒசூா் காமராஜ் நகா் குடியிருப்புப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முகமூடி அணிந்த மா்ம நபா்கள் நுழைந்தனா். குடியிருப்புப் பகுதிகளை வலம் வந்த இவா்கள் ஒவ்வொரு வீட்டையும் நோட்டமிட்டு சென்ாக கூறப்படுகிறது. இந்த காட்சிகளை சிசிடிவியில் பாா்த்த அப்பகுதி மக்கள் அதிா்ச்சிக்குள்ளாயினா்.

இதையடுத்து, நள்ளிரவு நேரத்தில் யாரும் வெளியே வரவேண்டாம் என அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், சிப்காட் போலீஸாா் இரவு நேரங்களில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு மா்ம நபா்களை கைது செய்ய வேண்டும் என அப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.