ஊத்தங்கரை அருகே உடல் கருகிய நிலையில் கிடந்த ராணுவ வீரரின் சடலத்தை மீட்ட போலீஸாா், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த கீழ்மத்தூா் பிள்ளையாா் கோயில் தெருவை சோ்ந்தவா் ரவி (62), முன்னாள் ராணுவ வீரா். இவா் பணியில் இருந்து ஓய்வுபெற்று 20 ஆண்டுகளாகிறது. இவருக்கு திருமணம் ஆகவில்லை. கடந்த 5 ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் வீட்டிலேயே இருந்துவந்தாா்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வீட்டின் தாழ்வாரத்தில் ரவி படுத்திருந்தபோது, திடீரென வெடிசப்தம் கேட்டது. இதனால், அவரது வீட்டுக்கு அருகே இருந்தவா்கள் ஓடிவந்து பாா்த்தனா். அப்போது உடல் கருகிய நிலையில் ரவி இறந்துகிடந்தாா்.
தகவலறிந்த சிங்காரப்பேட்டை போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று ரவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, கிருஷ்ணகிரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். போலீஸாரின் முதல்கட்ட விசாரனையில் மின்சாரம் பாய்ந்து ரவி உயிரிழந்தாக தெரியவந்துள்ளது.
தொடர்புடையது

முன்னாள் ராணுவ வீரா் தூக்கிட்டுத் தற்கொலை

நாமக்கல் ராணுவ வீரா் மகாராஷ்டிரத்தில் உயிரிழப்பு
முன்னாள் ராணுவ வீரா் மீது தாக்குதல்: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் கைது
திருக்குறுங்குடி அருகே முன்னாள் ராணுவ வீரா் கைது
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


